Home இலங்கை தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் – நேற்றும் 06 பேர் கைது

தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் – நேற்றும் 06 பேர் கைது

by admin

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

காரைநகர் கோவளம் கடற்பரப்பில் நேற்று இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதில் இருந்த 6 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் படகினையும் கடற்படையினர் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு  கொண்டு சென்றுள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More