71
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக இன்று மாலை நடைபெற்றது. மாலை 04.45 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையை அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராக உள் வீதியுலா வந்த முருகப் பெருமான் திருக்கைலாய வாகனத்தில் ஆரோகணித்ததும், சொக்க பாணைக்கு தீ மூட்டப்பட்டது. தொடர்ந்து முருகப் பெருமான் திருக்கைலாய வாகனத்தில் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி வழங்கினார்.
படங்கள் ஐ.சிவசாந்தன்
Spread the love