Home இலங்கை நினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு.

நினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு.

by admin

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த முற்பட்ட புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக இளவாலையைச் சேர்ந்தவரும் புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வருமான அருட்தந்தை பாஸ்கரன், ஆயர் இல்லத்துக்கு அருகில் உள்ள புனித மருத்தினார் குருபீடத்துக்கு முன்பாக நேற்று (27.11.20) வெள்ளிக்கிழமை மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் புனித மருத்தினார் குருபீடத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரனின் ஒளிப்படங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னங்களை உள்ளடக்கி அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் நீதிமன்றத் தடை உத்தரவை மீறி நினைவேந்தலை நடத்த முயன்றமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

அருட்தந்தை சார்பில் சட்டத்தரணி முன்னிலையாகி, சந்தேக நபர் சார்பில் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து சமர்ப்பணம் செய்தார்.

அதன் போது பிணைக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த காவற்துறையினர், சந்தேக நபருக்கு வெளிநாடுகளிலிருந்து நிதிப் பங்களிப்பு கிடைப்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் மன்றுரைத்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிவான் அருட்தந்தையை ஒரு லட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவு இட்டதுடன், வழக்கு விசாரணை வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைத்தார்.

#தமிழீழவிடுதலைப்புலிகள் #வேலுப்பிள்ளைபிராபகரன் #அருட்தந்தை #பாஸ்கரன் #மாவீரர்நாள் #நினைவேந்தல்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More