Home இலங்கை நுண் கடன் என்பது கொள்ளைக் கடன் – மத்திய வங்கியின் ஆளுநா்:-

நுண் கடன் என்பது கொள்ளைக் கடன் – மத்திய வங்கியின் ஆளுநா்:-

by editortamil

தனது உரையில்  நுண் கடனை கொள்ளை கடன் என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டு பேசியுள்ளார்.  சனிக்கிழமை  கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள  மத்திய வங்கியின்   பிராந்திய அலுவலகத்தில் பிரதேச சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய போதே  மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாh்.

வடக்கில் தற்போது நுண் கடன் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. வடக்கிற்கான தனது விஜயத்தில்  இதனை தான் நன்றாக விளங்கிக்கொண்டதாகவும்  எனவே இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் கடனிலிருந்து கிடைக்கும் வருமானம்  முழுவதுமாக வடக்கிலிருந்து வெளியேறுகிறேது. வடக்கில் புதிய உற்பத்தி முதலீடுகள் இன்மையும் உற்பத்தியாளர்களுக்கான நடைமுறை மூலதனம் இன்மையும் வடக்கில் காணப்படுகின்ற நிலைமைகளாக உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More