Home இலங்கை படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

by admin

வடக்கு மற்றும் கிழக்கில்  படையினர் வசமுள்ள காணிகள் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் இதுவரை விடுவிக்கப்படாமை தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கிடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது,

படையினரின் ஆதிக்கத்திலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதன் ஊடாக சிறுபான்மையினரின் நம்பிக்கையை வெற்றிக் கொள்வதற்கு ஏதுவான காரணியாக அமையும் என்பதும் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண அமைச்சர்களான ஏ.எல்.எம் நசீர் ,ஆரியவதி கலப்பதி மற்றும்   முதலமைச்சரின் செயலாளர் யூ.ஏ.எல் அஸீஸ் உட்பட பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்,

அத்துடன் இதன் போது  தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக சிறுபான்மையினருக்கான நிரந்தரமாக பாதுகாப்பான தீர்வொன்றை  பெறுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

இதேவேளை கிழக்கின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு பிரித்தானியாவின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதுடன் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளை கிழக்கு மாகாணத்துக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More