Home இந்தியா பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

by admin


இலங்கை சிறையில் உள்ள 51 மீனவர்களையும், 114 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாம்பன் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்து 29 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டு   மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  51  மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும்  இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 114 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுமே  பாம்பன் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 1500 மீனவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன் பாம்பன் கடற்கரையில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More