Home இலங்கை புர்கா -அரச கல்வி கொள்கையைப் பின்பற்றாத மதராஸாக்களுக்கு விரைவில் தடை

புர்கா -அரச கல்வி கொள்கையைப் பின்பற்றாத மதராஸாக்களுக்கு விரைவில் தடை

by admin

புர்கா, அரச கல்வி கொள்கையைப் பின்பற்றாத மதராஸாக்கள் விரைவில் தடை செய்யப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளாா்.

சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

மேலும் 1-13 வரையிலான இஸ்லாமியப் பாடப் புத்தகங்களில் ஏனைய மதத்தினருக்கு எதிரானக் கருத்துகள் சூட்சமமான முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமெனவும், தாக்குதலோடு தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளாா் #புர்கா #மதராஸாக்கள் #தடை #சரத்_வீரசேகர #உயிர்த்த_ஞாயிறு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More