Home இலங்கை பேராதனை பல்கலை மாணவர் விடுதியில் தீ – புத்தகங்கள் – உடமைகள் சேதம்

பேராதனை பல்கலை மாணவர் விடுதியில் தீ – புத்தகங்கள் – உடமைகள் சேதம்

by admin

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கான தனியார் விடுதிக்குள் ஏற்பட்ட தீ காரணமாக, மாணவர்களின் புத்தகங்கள் உள்ளிட்ட உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (19) இரவு த விடுதிக்குள் 20- 23 மாணவர்கள் இருந்த போது ஏற்பட்ட இந்தத் தீ பரவலின் போது, எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மாணவர்களின் கற்றல் உபகரணங்கள், மடி கணினிகள், ஆடைகள் உள்ளிட்டவை தீயில் எரிந்து கருகியுள்ளன.

முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்விடுதியில் தங்கியிருந்ததாகவும் தீயால் உடைமைகளை இழந்த மாணவர்கள் 10 பேருக்கு உப்பீடாதிபதி நிதியத்திலிருந்து தலா 7500 ரூபாய் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என தெரிவித்துள்ள பேராதனை காவல்துறையினா் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More