Home இலங்கை பொத்துவில் கடற்கரைப் பகுதியில் நிலநடுக்கம்

பொத்துவில் கடற்கரைப் பகுதியில் நிலநடுக்கம்

by admin

அம்பாறை, பொத்துவில் கடற்கரைப் பகுதியில் நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முற்பகல் 11.44 மணியளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமானது 4.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தொிவித்துள்ளது.

பொத்துவில் – சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன் சதுக்கம், களப்புகட்டு ஆகிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் க இடர் முகாமைத்துவ நிலையம் தொிவித்துள்ளது. #அம்பாறை #பொத்துவில் #கடற்கரைப்பகுதி #நிலநடுக்கம் #இடர்முகாமைத்துவநிலையம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More