Home இலங்கை மஹிந்த தரப்பினர் கொலைக்குழுவொன்றை இயக்கியுள்ளனர் – சுஜீவ சேனசிங்க

மஹிந்த தரப்பினர் கொலைக்குழுவொன்றை இயக்கியுள்ளனர் – சுஜீவ சேனசிங்க

by admin


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் கொலைக்குழுவொன்றை இயக்கியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ஆட்சிக் காலத்தில் சட்டவிரோதமாக கொலைக்கும்பல் ஒன்று இயங்கியுள்ளமை விசாரணைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது என  கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது; தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஆட்சிக் காலத்தின் போது லசந்த விக்ரமதுங்க கொலையுடன், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தொடர்பு உண்டு என தாம் சந்தேகப்பட்டதாகவும் எனினும் தாம் இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புபடவில்லை என சரத்பொன்சேகா தெளிவாக கூறியுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.
குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More