Home இலங்கை மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதன் பின்னரே, வடக்கு கிழக்கு மாகாணங்கள் கல்வியில் பின்னடைவு ! 

மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதன் பின்னரே, வடக்கு கிழக்கு மாகாணங்கள் கல்வியில் பின்னடைவு ! 

by admin

இலங்கையில் உள்ள மாகாணங்களின் கல்வி மட்டத்தில், வடமாகாணம், 9வது மாகாணமாக பின்தள்ளப்பட்டமைக்கு வடமாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் நேற்று யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கல்வித் தரத்தில் வடமாகாணம் 9வது இடத்திலும், கிழக்கு மாகாணம் 8வது இடத்திலும் இருப்பதாகவும் வடகிழக்கு மாகாணங்களில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதன் பின்னர், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதாகவும் பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள், வேறு துறைகளுக்குச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வடகிழக்கு மாகாணங்களில் கணித விஞ்ஞான பாட ஆசிரியர்கள் மிகக்குறைவாக இருப்பதனால், ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களின் 394 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்த அவர்,   வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதேபோன்ற ஒரு விபரத்தை தயாரித்து வழங்கி மாற்று வழிகளை தேடுமாறு கோரியிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.  பட்டதாரிகளுக்கு நியமனம் கொடுக்கின்றார்கள். மாகாணத்தில் மட்டும் பட்டதாரி அல்லாதவர்களுக்கு மத்திய அமைச்சு நியமனம் கொடுக்கின்றது. அமைச்சர்களின் விருப்பமாகவும், பாடசாலைக்குச் செல்லாதவர்களும், தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கணித பாட ஆசிரியர்களுக்கு 188 வெற்றிடங்களும், விஞ்ஞான பாடத்திற்கு 161 வெற்றிடங்களும், ஆங்கில பாடத்திற்கு 51 வெற்றிடங்களும் தமிழ் பாடத்திற்கு 99 வெற்றிடங்களும் நிலவுவதாக கூறிய அவர், இந்த நியமனங்களை யார் வழங்குவது? மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, வேறு மாகாணங்களில் வழிவகுத்த விடயங்களை மாகாண கல்வி அமைச்சிடம் கொடுத்தோம். அதை யாரும் கேட்பதாக இல்லை என்றும் கூறினார். அத்துடன் கடந்த 5 வருடங்களாக மாகாண சபையில் சண்டையும் சர்ச்சரவும் நிகழ்ந்தது. தற்போது, ஓய்ந்து நின்மதியாக இருக்கின்றது என்றும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேந்திரன்மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More