Home இலங்கை மாணவன் ஒருவரைக்  காணவில்லை

மாணவன் ஒருவரைக்  காணவில்லை

by admin

பதுளை – ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தை 4ஆம் பிரிவில்  வசித்து வந்த  மாணவன் ஒருவா்  காணாமல் போயுள்ளதாக  அவரது  பெற்றோர் பதுளை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  16வயதான விவேகானந்தன் ரகுமான்  என்னும்    மாணவனே  இவ்வாறுகாணாமல் போயுள்ளார்.

பெத்தேகம பகுதியில் உள்ள சகோதர மொழிப் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்று வந்த குறித்த மாணவன் சம்பவ தினமன்று பெத்தேகம புரான மகா விகாரையில் நடைபெற்ற மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறிச் சென்றுள்ள நிலையில் திரும்பி வரவில்லை என முறைப்பாட்டில் தொிவிக்கப்பட்டுள்ளது.

 இறுதியாக  அவா் சிவப்பு நிற ரீ  சேர்ட்டும், நீல நிற, நீள காற்சட்டையும் அணிந்திருந்ததுடன், ஊதா நிறப் புத்தகப் பையை கொண்டு சென்றுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.  இவர் குறித்த தகவல் அறிந்தோர் 076 0178821, 077 2405245 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு தந்தை விவேகானந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More