76
ஹற்றன் நஸ்னல் வங்கி பணியாளர் இடைநிறுத்தப்பட்டமைக்கு அமைச்சர் மனோ கணேசன் கண்டனம் வெளியிட்டுள்ளார். யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்திய பணியாளர்கள் சிலர் இடைநிறுத்தப்பட்டிருந்தனர். இந்த நடவடிக்கையானது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வங்கி முகாமைத்துவத்தின் அனுமதி பெற்றுக் கொள்ளாது நினைவஞ்சலி நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ‘முன்னேற்றத்தின் பங்காளி’ வாசகத்தைக் கொண்ட ஹட்டன் நஸ்னல் வங்கி, மனிதாபிமான முன்னேற்றத்தின் ஊடாக எதனை அடைய முயற்சிக்கின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Spread the love