Home இலங்கை முஸ்லிங்கள் எதிர்நோக்கும் அச்ச நிலைமை தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் ஐக்கிய அரபு இராச்சிய தூதுவரிடம் எடுத்துரைப்பு

முஸ்லிங்கள் எதிர்நோக்கும் அச்ச நிலைமை தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் ஐக்கிய அரபு இராச்சிய தூதுவரிடம் எடுத்துரைப்பு

by admin

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பத்தாஹ் காஸிம் அல் முல்லாஹ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதரகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கிழக்கு முதலமைச்சரின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் முஸ்லிங்கள் எதிர்நோக்கி வரும் அச்ச நிலைமை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன் போது ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவரிடம் விரிவாக எடுத்துரைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புக்களையும் கிழக்கு முதலமைச்சர் கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More