Home உலகம் மூன்று வருடங்களின் பின்னர் வடமாகாண சபைக்கு கீதம் இயற்ற முடிவு.

மூன்று வருடங்களின் பின்னர் வடமாகாண சபைக்கு கீதம் இயற்ற முடிவு.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது வடமாகாண சபைக்கு என பிரத்தியோக கீதம் உருவாக்குவது தொடர்பில் சபையில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.  வடமாகாண சபையின் 67 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.  அதன் போதே அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் கீதம் உருவாக்குவது தொடர்பில் அறிவித்தார்.

அதன் போது மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண சபைக்கு என இதுவரை பிரத்தியோகமாக கீதம் இயற்றப்படவில்லை. அதனை புதிததாக இயற்றுவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அதன் முதல் கட்டமாக கீதம் இயற்றுவது தொடர்பில் பத்திரிகையில் விளம்பரம் செய்வது எனவும் , அதன் ஊடாக கீதம் இயற்றி வரும் போது அதில் எதனை கீதமாக ஏற்றுக்கொள்வது என சபை பின்னர் தீர்மானிக்கும் என அவைத்தலைவர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More