Home பிரதான செய்திகள் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

by admin

சிம்பாபேவில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின்  ஐந்தாவது போட்டியில்  இலங்கை அணி  மேற்கிந்திய தீவுகள் அணியை ஒரு ஓட்டத்தால் வென்றுள்ளது.  நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தனைத்  தொடர்ந்து  துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  50 ஓவர்களின்  நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் இலங்கை 330 ஓட்டங்களை  பெற்றுக் கொண்டது.

331 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்ட  இலக்குடன் களமிறங்கிய  மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 329 ஓட்டங்களை பெற்றது. இதன்படி ஒரு ஓட்டத்தால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More