Home உலகம் மொசூலில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பிரான்ஸ், ஈராக் ஊடகவியலளார்கள் பலி

மொசூலில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பிரான்ஸ், ஈராக் ஊடகவியலளார்கள் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஈராக்கின் மொசூல் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பிரான்ஸ் மற்றும் ஈராக் நாடுகளின் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அரச படையினரின் முன்நகர்வுகள் தொடர்பில் செய்தி அறிக்கையிட்டுக் கொண்டிருந்த போது நிலக்கண்ணி வெடியொன்று வெடித்ததில் இரண்டு ஊடகவியலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸின் Stephan Villeneuve  என்ற ஊடகவியலாளரும், ஈராக்கின் Bakhtiyar Haddad என்ற ஊடகவியலாளருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளனர். ராஸ் அல் ஜாடா மாவட்டத்தின் மேற்குப் பகுதி பழைய நகர் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் இதுவரையில் தொழில்சார் மற்றும் தொழில்சார்பற்ற ஊடகவியலாளர்கள் 27 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More