Home இந்தியா மோடியை எதிர்த்து பாதுகாப்புப் படை வீரர் போட்டி

மோடியை எதிர்த்து பாதுகாப்புப் படை வீரர் போட்டி

by admin


மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஹரியானா மாநிலம் ரேவரி மாவட்டத்தைச் சேர்ந்த தேஜ் பகதூர் யாதவ் எல்லை பாதுகாப்புப் படை வீரரே இவ்வாறு போட்டியிடுகின்றார்.2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எல்லையில் பணியில் இருந்தபோது காணொலி ஒன்றை வெளியிட்டிருந்த குறித்த ராணுவ வீரர் அதில் ராணுவ வீரர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது எனவும் சிரேஸ்ட அதிகாரிகள் உணவுப் பொருட்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றனர் எனவும் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில்,பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார். அதிக கட்சிகள் என்னைச் சேர்த்து கொள்ள முன்வந்தன எனினும் தான் ஆனால், தனித்துப் போட்டியிடவே விரும்புகிறேன் எனவும் தெரிவித்த தேஜ் பகதூர் தேர்தலில் ஜெயிப்பதோ, தோற்பதோ என்னுடைய நோக்கமில்லை எனத் தெரிவித்துள்ளார்

ராணுவ வீரர்கள் விஷயத்தில் அரசு தோல்வி அடைந்துவிட்டது. ராணுவ வீரர்கள் பெயரில் வாக்குகளைப் பெற முயற்சி செய்து வருகிறார் மோடி. ஆனால், அவர்களுக்கு மோடி எதுவும் செய்யவில்லை. கடந்த சில மாதங்களாகவே தேர்தலுக்காகத் தயாராகி வருகிறேன். ஊழல் பிரச்சினையை மையப்படுத்தியே இந்தத் தேர்தலைச் சந்திக்கப் போகிறேன். விரைவில் வாரணாசியில் சென்று முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விவசாயிகளின் உதவியுடன் பிரச்சாரத்தைத் தொடங்குவேன்; எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More