Home இலங்கை இணைப்பு2 -யாழ் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்த ஐவருக்கும் விளக்கமறியல்

இணைப்பு2 -யாழ் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்த ஐவருக்கும் விளக்கமறியல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில் கைது செய்யப்பட்ட வாள்வெட்டுக் குழுவை சேர்ந்த ஐவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழில் அன்மைகாலமாக இடம்பெற்று வந்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாண காவல்துறையினர் ஐவரை சந்தேகத்தில் கைது செய்தனர். கைது செய்தவர்களிடமிருந்து வாள்கள் உட்பட கூரிய ஆயுதங்களையும் மீட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட ஐவரையும் , அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களையும் காவல்துறையினர் இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய போது, ஐவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாண வாள்வெட்டு கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் கைது

Feb 1, 2017 @ 07:49


யாழ்ப்பாண வாள் வெட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் அரசடி வீதியில் வாள்களைக் கொண்டு நபர்களைத்தாக்கியதுடன் வர்த்தக நிலையமொன்றை சேதப்படுத்திய வாள் வெட்டுக் கும்பலின் உறுப்பினர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் இவர்களுடன் நான்கு வாள்கள், ஒரு கைக்கோடாரி, கூரிய ஆயுதமொன்று, ஒரு மோட்டார் சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More