Home அரசியல் வட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவுநாள்

வட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவுநாள்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

1985 ஆம் ஆண்டு மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் அமரர். வி. சுந்தரமூர்த்தி, ஆசிரியர்களான அமரர்கள் ரி.மகேந்திரன் மற்றும் எஸ்.இரட்ணதுரை ஆகியோர் ஆகியோர் பாடசாலை வளாகத்துள் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதையும், அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மாணவர்களையும், பொதுமக்களையும் நினைவு கூரும் நிகழ்வு இன்று 30.01.2017 திங்கள்கிழமை குறித்த பாடசாலையில் நடைபெற்றது.

வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா அவர்களின் அனுசரணையில் பாடசாலையின் அதிபர் அ.தேவதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த நினைவேந்தல் வைபவத்தில் பிரதம அதிதியாக வட மாகாணசபையின்  முதலமைச்சர்  நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபையின் பேரவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்  ரிப்கான் பதியுதீன்,  எம்.கே.சிவாஜிலிங்கம்  ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More