Home உலகம் வட கொரிய பிரஜைகளுக்கு வீசா வழங்கப்படாது – ஐக்கிய அரபு இராச்சியம்

வட கொரிய பிரஜைகளுக்கு வீசா வழங்கப்படாது – ஐக்கிய அரபு இராச்சியம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடகொரிய பிரஜைகளுக்கு வீசா வழங்கப்படாது என ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது. வடகொரியாவில் காணப்படும் வதிவிடமற்ற தூதரகத்தையும் மூட உள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் வடகொரிய பிரஜைகளுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ வீசா வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சில ஆயிரக் கணக்கான வடகொரிய பிரஜைகள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் குறிப்பாக கட்டுமான துறைகளில் அதிகளவானவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More