Home இலங்கை விசுமடுவில் 19 வயது மாணவன் பலி – எலிக்காச்சல் என சந்தேகம்

விசுமடுவில் 19 வயது மாணவன் பலி – எலிக்காச்சல் என சந்தேகம்

by admin

முல்லைத்தீவு புதுகுடியிடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எம். சதீஸ்குமார்  எனபவரே காச்சால் காரணமாக கிளி நொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனிற்றி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு எலிக்காச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்படுவதாகவும், மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக  மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்  வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே கீழ்குறிப்பிடப்படும் அறிகுறிகள் காணப்படும் போதும் உடனடியாகவைத்தியசாலையை நாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு  கிளிநொச்சி சுhகதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்

உடம்பு உளைச்சல்,  அல்லது உடல் நோதல், தலையிடி, உடல் களைப்பு, அல்லது உடல் அலுப்பு, போன்ற பிரதான நோய் அறிகுறிகளுடன் கண் சிவத்தல்,  சத்தி (வாந்தி) கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் ,சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீர் வெளியேறுவது குறைதல்ஆகிய நோய் அறிகுறிகள் இருக்கலாம். ஆனால் சில நோயாளிகளுக்கு எந்த ஒரு குணம் குறியும் தென்படாதுஃ எனவே உடனடியாக வைத்தியசாலையை நாடி உரிய சிகிசை பெறவேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More