Home இலங்கை வெளிவாரி பட்டதாரிகள் – உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் :

வெளிவாரி பட்டதாரிகள் – உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் :

by admin


வெளிவாரி பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

பட்டதாரி நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வெளிவாரி பட்டதாரிகள் இன்றையதினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் போது பட்டதாரி நியமனத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கவில்லை என தெரிவித்திருந்தனர் அவர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலையே சீ.வீ.கே.சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

அண்மையில் நாடளாவிய ரீதியில் வழங்கபட்ட பட்டதாரி நியமனங்களில் உள்வாரி பட்டதாரிகளுக்கு மட்டும் நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டது. எனினும் வெளிவாரி மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகள் நியமனங்கள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.

இன் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடி இன்றி அனைத்து பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகள் அனைவருக்கும் நியமனங்கள் உடனடியாக வழங்கப்படவேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விடயம் தொடர்பிலான தொடர் நடவடிக்கைகளை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார். #வெளிவாரிபட்டதாரிகள்   #நியமனங்கள் #சீ.வீ.கே.சிவஞானம்  #தமிழரசு கட்சி
– மயூரப்பரியன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More