Home இலங்கை Budget 2021 காணாமல் போனவர்களுக்கு, நட்டஈடு வழங்க 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

Budget 2021 காணாமல் போனவர்களுக்கு, நட்டஈடு வழங்க 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

by admin

சுதந்திர இலங்கையின் 76ஆவது வரவுசெலவுத்திட்டத்தில், பல்வேறு காலப்பகுதிகளில் இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு நட்டஈடு வழங்க 300 மில்லியன் ரூபாயை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிதிஅமைச்சரால் வாசிப்புக்கு எடுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட அறிகை பல்வேறு அறிவிப்பகளை வெளியட்டுள்ளது.

ஆசிரியர்-சம்பள முரண்பாட்டை ஒரே நேரத்தில் தீர்ப்பதற்கு, 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


அரசாங்க பணியாளர்களின் மோட்டார் சைக்கிள் கொள்வனவுக்காக 500 மில்லியன் ஒதுக்கப்பட்டு்ளது.

சேவைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளை 2022 ஜனவரி மாதம் தொடக்கம் நிரந்தர நியமனம் வழங்கவும் 7,600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்க 100 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு அபிவிருத்திக்காக 3,000 மில்லியன் ஒதுக்கீடு
.

நீதிமன்ற நடவடிக்கை மற்றும் நீதிமன்ற டிஜிட்டல் மயப்படுத்தவும் நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 5,000 மில்லியன் ரூபாயை ஒதுக்க நடவடிக்கை.

பொதுமக்கள் பாதுகாப்புக்காக காவல் நிலையங்களுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு.


கைதிகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்த 200 மில்லியன் ஒதுக்கீடு.

விசேட தேவையுடையவர்களுக்கு, முதியவர்களுக்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


கர்ப்பிணிகளுக்கான போசாக்கு பொதியை 2 வருடங்களுக்கு வழங்க நடவடிக்கை.


சூழல் பாதுகாப்புகாக்காக 2,000 மில்லியன் ஒதுக்கீடு.


வனப்பாதுகாப்பக்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

வனஜீவராசிகள் பாதுகாப்புக்காக 1,000 மில்லியன் ஒதுக்கீடு.


கிராமிய உட்கட்டமைப்பு, பொது சேவைகளுக்காக 5,300 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை.
சுகாதாரம், சுதேச மருத்துவத்தை அபிவிருத்தி செய்ய 5,000 மில்லினை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.

கொரோனா முடக்க காலத்தில் வருமானத்தை இழந்த பாடசாலை வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்க, 400 மில்லியன் ஒதுக்கீடு.

வருமானத்தை இழந்த ஓட்டோ சாரதிகளுக்கு 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

கொரோனா முடக்க காலத்தில் வருமானத்தை இழந்த பாடசாலை வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்க, 400 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறேன்.


வீதி அபிவிருத்திக்காக மேலதிகமாக 20,000 ரூபாய் மில்லியனை ஒதுக்கீடு.
அனைவருக்கும் குடிநீர் வசதி 24 மணி நேரமும் சுத்தமான குடிநீரை வழங்க 15,000 ரூபாய் மில்லியனை ஒதுக்க நடவடிக்கை.


திரவப்பால் உற்பத்தியை அதிகரிக்க தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 1,000 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு. என பலதரப்பட்ட அறிவிப்பகள் வெளியாகி உள்ளன.

2022ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவால், இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வரவு-செலவுத்திட்ட யோசனைகள் முன்வைத்து அமைச்சர் பசில் ராஜபக்ஸ பிற்பகல் 02.00 மணிக்கு உரையை ஆரம்பித்தார். இதற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த மாதம் 07ஆம் திகதி நிதி அமைச்சரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

2022ஆம் நிதியாண்டுக்கான சேவைகளுக்கான செலவீனங்களுக்கு திரட்டு நிதியத்திலிருந்து மற்றும் அரசாங்கத்துக்குரிய அல்லது அதன் கையாளுகையில் உள்ள ஏனைய நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கும், இலங்கைக்குள் அல்லது அதற்கு வெளியே கடன் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றுக்காக இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.

இதற்கமைய 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான சேவைக்காக மதிப்பிடப்பட்டதான இரண்டாயிரத்து ஐந்நூற்று ஐந்து பில்லியன் முன்னூற்று நாற்பத்தாறு மில்லியன் ஐந்நூற்று ஐம்பத்தெட்டாயிரம் ரூபாய் அரசாங்கத்தின் செலவீனத்துக்குப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அரசியலமைப்பின் xvii பிரிவுக்கு அமைய அரசாங்கத்தின் நிதி தொடர்பான முழுமையான கட்டுப்பாடு பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டிருப்பதுடன், வரிவிதிப்பு, திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்துக்குரிய அல்லது அதன் கையாளுகையில் உள்ள ஏனைய நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வது உள்ளிட்ட விடயங்களுக்குப் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

நாளை முதல் இம்மாதம் 22ஆம் திகதி வரை ஏழு நாள்கள் வரவு-செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும். நவம்பர் 22ஆம் திகதி பி.ப 05.00 மணிக்கு இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

நவம்பர் 23ஆம் திகதி முதல் குழு நிலையிலான விவாதம் ஆரம்பமாகவிருப்பதுடன், சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசெம்பர் 10ஆம் திகதி வரை 16 நாள்கள் விவாதத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசெம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More