Home பிரதான செய்திகள் பிரித்தானிய கால்பந்தாட்ட போட்டியில் ரசிகர்கள் கலகத்தில் ஈடுபட்டதனால் பதற்ற நிலைமை:

பிரித்தானிய கால்பந்தாட்ட போட்டியில் ரசிகர்கள் கலகத்தில் ஈடுபட்டதனால் பதற்ற நிலைமை:

by editortamil

பிரித்தானியாவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டி ஒன்றில் ரசிகர்கள் கலகத்தில் ஈடுபட்ட காரணத்தினால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவின் முன்னணி கழகங்களான வெஸ்ட் ஹாம் மற்றும் செல்சியா கழகங்களுக்கு இடையில் இந்தப் போட்டி நடைபெற்றது.

போட்டியில் 2க்கு ஒன்று என்ற கோல் வித்தியாசத்தில் வெஸ்ட் ஹாம் அணி வெற்றியீட்டியது. எனினும், ரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு மைதானத்தில் குழப்ப நிலைமை ஏற்பட்டது. இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என வெஸ்ட் ஹாம் கழகத்தின் தலைவர் Slaven Bilic தெரிவித்துள்ளார்.

கலகத்தில் ஈடுபட்ட ரசிகர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சில ரசிகர்கள் போத்தல்களையும் நாற்காலிகளையும் வீசி எறிந்து கலகத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More