Home உலகம் Texas பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு:-

Texas பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு:-

by editortamil

அமெரிக்கா

அமெரிக்காவின் Texas மாநில பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பொலீஸார் ஒருவர் கொல்லப்பட்டார். தப்பி ஓடிய மாணவனை பொலீசார் தேடி வருகின்றனர்.

அமெரிக்காவின் Texas மாநிலம் லப்போக் நகரில் உள்ள, டெக்சாஸ் டெக் பல்கலைக்கழகம் வளாகத்திற்குள் காவல் நிலையமும் உள்ளது. இங்குள்ள பொலீஸார் பல்கலைக்கழக மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவதுடன், அவ்வப்போது மாணவர்களின் அறைகளிலும் சோதனை செய்வது நடைமுறை என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வகையில், மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து அவர்களின் அறைகளில் பொலீஸார் திங்கட்கிழமை மாலை நடத்திய சோதனையில், ஒரு அறையில் போதை மருந்துகள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் சாதனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பொலீஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும் இது தொடர்பாக ஒரு மாணவனை பொலீஸார் சந்தேகத்தின்பேரில் கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த வேளையில் விசாரணைக்கு உட்பட்ட மாணவன், தன்னிடம் இருந்த துப்பாக்கியினால் பொலீஸாரை நோக்கி சுட்டுள்ளார். இதில் அந்த பொலீஸ் சிப்பாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவன் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்த மாணவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. அத்துடன், யாரும் வெளியேற வேண்டாம் எனவும்ம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பொலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. தப்பி ஓடிய மாணவனை பொலீஸார் தேடி வருகின்றனர்.

அமெரிக்காவில் சமீபகாலமாக அதிகரித்து வரும் துப்பாக்கி சூடு சம்பவம் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி உ்ளதாக தெரிவிக்கப்பட்ட உள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More