ஆபிரிக்க நாடான கொங்கோவில் தேவாலயம் ஒன்றிற்குள் கிளர்ச்சியாளர்கள் புகுந்து துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் நடத்தியதில் 70 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயக குடியரசு, கிழக்கு பகுதியில் ருவாண்டா நாட்டுடன் தனது எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. கொங்கோ நாட்டின் கனிம வளங்கள் நிறைந்த சொர்க்கப்பூமியாக எல்லை பகுதியில் அமைந்துள்ள வடக்கு கிவூ, தெற்கு கிவூ உள்ளிட்ட மாகாணங்கள் விளங்குகிறது.
இதனால் அங்கு சுரங்கங்களை தோண்டிக் கொங்கோ ஜனநாயக குடியரசு அரசாங்கம் கனிம வளங்களை வெட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில் ருவான்டா நாட்டின் ஆதரவு கொண்ட எம்-23 என்ற கிளர்ச்சியாளர்கள் குழு இந்த பகுதிகளைச் சுற்றிவளைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்தது. இதனால் கடந்த மாதம் தொடங்கி அங்கு தொடா் வன்முறை இடம்பெற்று வருகிறது.
இதற்கிடையே, தெற்கு கிவூ நகரை எம்-23 கிளர்ச்சியாளர்கள் குழுவினர் சுற்றிவளைத்துக் கைப்பற்றினர். அந்த மாகாணத்தின் முக்கியமான நகரமான புகாவு நகரைக் கைப்பற்றி விமானநிலையத்தை முற்றுகையிட்டனர். முன்னதாக அங்குள்ள தேவாலயத்திற்குள் பதுங்கி இருந்து செயல்பட்டு வந்த கொங்கோ ராணுவ வீரா்கள் குறித்து அறிந்த கிளர்ச்சியாளா்கள் குழுவினர் அங்கு சென்று சரமாாியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ராணுவ வீரர்கள் உட்பட 70 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.