Home இந்தியா நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் 3-வது அமெரிக்க விமானம் சென்றடைந்தது!

நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் 3-வது அமெரிக்க விமானம் சென்றடைந்தது!

by editorenglish

அமெரிக்காவின் எல்லை வழியே அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் அந்நாட்டுக்குள் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்படி, சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளை டிரம்ப் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் கடந்த 5-ந் தேதி அமெரிக்க ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் நாடெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும் போதே 2-வது கட்டமாக அங்கிருந்து 116 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அதன்படி 116 இந்தியர்களுடன் அமெரிக்காவின் 2-வது ராணுவ விமானம் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் சென்றடைந்தது. கடும் கண்டனம் எழுந்தபோதிலும் இந்த முறையும் இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் 112 இந்தியர்களுடன் 3-வது அமெரிக்க விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அமிர்தசரஸ் துணை ஆணையர் சாக்ஷி சாவ்னி தெரிவித்தார். விமானத்தில் அரியானாவைச் சேர்ந்த 44 பேர், குஜராத்தை சேர்ந்த 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 31 பேர், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 2 பேர், உத்தரகாண்ட் மற்றும் இமாசலபிரதேசத்தைச் சேர்ந்த தலா ஒருவர் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடியேற்றம் மற்றும் பின்னணி சோதனைக்கு பிறகு அனைவரும் அவரவர்களின் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சாக்ஷி சாவ்னி செய்தியாளர்களிடம் கூறினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More