93
யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் வைத்துக் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுத் துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடி படையினரும், மருதங்கேணிக் காவல்துறையினரும் இணைந்து இந்தக் கைது நடவடிக்கையை நேற்று மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்டவர் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடுப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரிடம் இருந்து 5 கிலோ 660 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணிக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Spread the love