Home இலங்கை ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் – சாணாக்கியன்

ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் – சாணாக்கியன்

by editorenglish

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சு சார் முதலாவது ஆலோசனைக் கூட்டமானது நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றைய தினம் (20/2/2025) ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்   ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“நான் இவ் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவின் குழு உறுப்பினர் என்னும் வகையில் கலந்து கொண்டிருந்தேன். இக் கூட்டத்தில் படைத்தளபதிகளும் கலந்து கொண்டனர். இதன்போது மட்டக்களப்பில் உள்ள பல பிரச்சனைகள் தொடர்பாக நான் பல காலமாக முன்வைத்த கோரிக்கைகளை அன்றைய தினமும் இப் புதிய அரசிடமும் எடுத்துரைத்திருந்தேன்.

அதனடிப்படையில். மட்டக்களப்பில் உள்ள கையகப்படுத்தப்பட்ட இராணுவ முகாங்களான முறக்கொட்டான் சேனை, பாலையடி வட்டை, குருக்கள் மடம், காயங்கேணி, மற்றும் விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட புதூர் மக்களுக்கு சொந்தமான நிலம், தாண்டியடி துயிலும் இல்லம், அதனுடன் களுவாஞ்சிக்குடி காவல் நிலையம், மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய மற்றும் மக்களுக்குச் சொந்தமான வாகரை பிரதேச அரச காணிகளில் அநேகமானவை இரானுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகின்றது. இவை உட்பட்ட பல பொது மக்களுக்கு சொந்தமான நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அதற்கான குழு ஒன்றினை நியமிப்பது தொடர்பில் ஆராய்வதாக உறுதி அளித்தார். அதனுடன் கடந்தகாலத்தில் திரிபோலி ஆயுத படைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் தொடர்பான சாட்சிகளை விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்திருந்தேன் அதனையும் உடனடியாக விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More