அயர்லாந்து ஜனாதிபதி ஹிக்கின்சை சந்தித்து இந்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடியுள்ளாா் , இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் இதற்காக கடந்த 4-ம் திகதி டெல்லியில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்துக்கு அவர் சென்றார்.
இந்நிலையில், அயர்லாந்து நாட்டுக்கு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் டப்ளின் நகரில், அந்நாட்டு ஜனாதிபதி மைக்கேல் ஹிக்கின்சை நேரில் சந்தித்து பேசியுள்ளாா்.
இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், நவீன உலகம் மற்றும் அதன் வளர்ச்சி பற்றிய விவாதங்களில் ஈடுபட்டோம். அதில், அவருடைய கருத்துகளை அவர் பகிர்ந்து கொண்டார். தேசியம் வலுப்படுவதற்கான கலாசாரத்தின் பங்கு பற்றியும் நாங்கள் பேசினோம் என தெரிவித்து உள்ளார். மத்திய அமைச்சரின் அயர்லாந்துப் பயணம் நாளை மறுநாள் நிறைவடைகிறது.
இதற்கு முன்பு, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு உள்துறை அமைச்சா் வெட் கூப்பரை சந்தித்து ஆள் கடத்தல் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள இணைந்து மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளை பற்றி இருவரும் பேசினர்.
இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு, பொருளாதார ஒப்பந்தம் மற்றும் மக்கள் ஒருவருடன் ஒருவர் பரிமாற்றங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை முன்னெடுத்து செல்வது பற்றி விவாதிக்கப்பட்டது என அவர் தெரிவித்து உள்ளார். இந்த சந்திப்பில், உக்ரைன் போரில் இங்கிலாந்தின் அணுகுமுறையை பற்றி ஸ்டார்மர், ஜெய்சங்கரிடம் பகிர்ந்து கொண்டார்.