ரணில் விக்கிரமசிங்க,ஐக்கிய இராச்சியம், பொது நிதி,பிமல் ரத்நாயக்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு தனது மனைவியுடன் ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதற்காக 40,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் (ரூ. 16 மில்லியனுக்கும் அதிகமான) பொது நிதியைப் பயன்படுத்தியதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (16/03/2025) தெரிவித்தார்.
தனியார் பயணத்திற்காக பொது நிதியைப் பயன்படுத்துவது குற்றம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த அமைச்சர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்தினார்.
விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவியுடன் பத்து பேர் கொண்ட குழு ஒன்று சென்றதாகவும் இந்தப் பயணம் ஆரம்பத்தில் ஒரு தனிப்பட்ட பயணமாக விவரிக்கப்பட்டதாகவும், பின்னர் நிதியைப் பெறுவதற்காக ஜனாதிபதி செயலகம் அனுப்பிய கடிதத்தில் உத்தியோகபூர்வ பயணமாக காட்டப்பட்டதாகவும் ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளாா்.

