Home இலங்கைஉழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞர் பலி:-

உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞர் பலி:-

by editortamil

திருகோணமலை, சேருநுவர காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட உடப்புக்கேணி பகுதியில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் விநாயகபுரத்தைச் சேர்ந்த கடுக்காமுனை கிராம சேவையாளரான திருமதி காளிப்பிள்ளை ஸ்ரீஸ்கந்தராஜா என்பரின் மகனான 19 வதாயன பஜிர்வன் என்பரே உயிரிழந்துள்ளார்.

வயல் உழுதுவிட்டு, உழவு இயந்திரத்தைக் கழுவுவதற்காக தண்ணீர் உள்ள இடத்துக்குள் இறக்கிய போது, உழவு இயந்திரம் புரண்டதில் உழவு இயந்திரத்தின் சில்லில் சிக்குண்டமையால் இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More