குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மஹிந்தவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படாது என அண்மையில் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க கூறியிருந்தார் எனவும், மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் திட்டத்துடன் இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கத்தை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment