Home இலங்கை மக்கள் பணத்தை விரயம் செய்யாது நத்தார் மரம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிடையாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

மக்கள் பணத்தை விரயம் செய்யாது நத்தார் மரம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிடையாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மக்கள் பணத்தை விரயம் செய்யாது நத்தார் மரம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிடையாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். காலி முகத் திடலில் பாரியளவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த நத்தார் மரம் 200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படுவதாக கிடைத்த தகவல் காரணமாக தாம் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் எனினும் இந்த மரத்திற்காக 12 மில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்படுவதாக அறியக் கிடைத்தது எனவும் மக்களின் பணம் விரயம் செய்யாது, நத்தார் மரம் நிர்மாணிக்கப்படுவதனை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் மரத்தை எந்தவொரு நபரும் எந்தவொரு இடத்திலும் நிர்மாணிக்க முடியும், அதனை தடுக்க முடியாது எனினும் அரசாங்கப் பணத்தைக் கொண்டு நத்தார் மரம் அமைக்கப்பட்டால் அதனை எதிர்ப்பதாகவும்  இதற்காக செலவிடப்படும் பணம் வறிய மக்களுக்காக செலவிட்டால் நன்மை அளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் மரம் நிர்மாணிப்பது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More