Home இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான கட்டணங்களில் மாற்றமில்லை

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான கட்டணங்களில் மாற்றமில்லை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான கட்டணங்களில் மாற்றம் செய்யப்படாது என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதலாம் திகதி முதல் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லை மற்றும் கட்டணத்தில் எவ்வித  மாற்றமும் ஏற்பாடாது என குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் போலியானவை எனவும், இது குறித்து எவரும் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதலாம் திகதி முதல் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறைகளில் அரசாங்கம் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More