Home இலங்கை நான்காம் மாடி குறித்த அச்சத்தை நீக்க வேண்டும் – அரசாங்கம்

நான்காம் மாடி குறித்த அச்சத்தை நீக்க வேண்டும் – அரசாங்கம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்காம் மாடி குறித்த அச்சத்தை நீக்க வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நான்காம் மாடியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அமைச்சர் சாகல ரட்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் பிழையானது அல்ல என்ற போதிலும் சில ஒழுக்க விதிகள் பின்பற்றப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நான்காம் மாடியில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதனை எவரும் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை காவல்துறை திணைக்களத்தினை முன்னேற்ற வேண்டியது அவசியமானது எனவும், நவீன முறைகள் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More