Home இலங்கை புத்தளம் மாவட்ட அரச வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிபு:-

புத்தளம் மாவட்ட அரச வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிபு:-

by admin


மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

புத்தளம் மற்றும் மாரவில் ஆகிய ஆதார வைத்தியசாலைகளிலும் முந்தல், ஆனமடு, கல்பிட்டி மற்றும் மாதம்பை ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளிலும் கடமையாற்றி வரும் தாதியர்கள் நேற்று ஆரம்பித்த இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது.

கடந்த ஏப்ரல் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More