Home கட்டுரைகள் ஜெனீவாவுக்குப் போதல்: – நிலாந்தன்:-

ஜெனீவாவுக்குப் போதல்: – நிலாந்தன்:-

by admin

தமிழ் மக்கள் காசிக்கு போவதுண்டு. கதிர்காமத்திற்கு போவதுண்டு, மடுவிற்கு போவதுண்டு. அவையெல்லாம் புன்ணியம் தேடிப் போகும் மத யாத்திரைகள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தழிழர்களுடைய வாழ்க்கையில் இணைந்திருக்கும் ஒரு புதிய அம்சம் ‘ஜெனீவாவுக்கு போதல்.’ இது நீதி தேடிப் போகும் ஓர் அரசியல் யாத்திரை. ஜெனீவாவிற்கு தாயகத்திலிருந்தும் ஆட்கள் போகிறார்கள். டயாஸ்பொறாவிலிருந்தும் போகிறார்கள். அரசியல் வாதிகள் போகிறார்கள் செயற்பாட்டாளர்கள், சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் போகிறார்கள் ஊடகவியலாளர்கள் போகிறார்கள் என். ஜி. ஓ. அலுவலர்கள் போகிறார்கள். இவர்களோடு சில சமயங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தும் சிலர் ஜெனீவாவிற்கு போய் வருகின்றார்கள். இதில் சிலர் ஜெனீவாவிற்கு போவதுண்டு. திரும்பி வருவதில்லை. அங்கேயே தஞ்சம் கோரி விடுகிறார்கள். இவ்வாறு ஜெனீவாவுக்குப் போதல் எனப்படுவது வெளியாருக்காகக் காத்திருக்கும் ஓர் அரசியலின் ஒரு பகுதிதான். வெளியாருக்காகக் காத்திருத்தல் எனப்படுவது 2009 மேக்கு முன்னரும் இருந்தது. அப்பொழுது களத்தில் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் 2009 மேக்குப் பின்னர் வெளியாருக்காகக் காத்திருத்தல் என்பதே தமிழ் அரசியலின் பெரும் பகுதியாக மாறி விட்டது. இதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம். 1. தாயகத்தில் நிலமைகள் இறுக்கமாக இருந்தபடியால் தாயகத்துக்கு வெளியில் அரசியலை அச்சமின்றி முன்னெடுக்கலாம் என்றிருந்த ஒரு நிலை. 2. தமிழ் டயஸ்பொறாவானது தமிழ்தேசியத்தின் கூர்முனை போல மேலெழுந்தமை. 3. சீனசார்பு மகிந்தவைக் கவிழ்ப்பதற்கு தமிழர்களுடைய பிரச்சினையை மேற்கு நாடுகள் கையிலெடுத்தமை. 4. தமிழர்களுடைய பிரச்சினையை மகிந்தவுக்கு எதிரான ஒரு கருவியாகக் கையாள்வதற்காக மேற்கு நாடுகள் தமிழ் டயஸ்பொறாவை அதன் வல்லமைக்கு மீறி ஊதிப் பெரிதாக்கிக் காட்டியமை. மேற் சொன்ன பிரதான காரணங்களினால் தமிழ் அரசியலானது மேற்கை நோக்கி அதாவது வெளிநோக்கி எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஒன்றாக மாறியது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஜெனிவாக் கூட்டத் தொடரின் போதும் இந்த காத்திருப்பு மேலும் மேலும் அதிகரித்து வந்தது. இதன் ஒரு பகுதியே ஜெனிவாவுக்குப் போதல் ஆகும். கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி வரையிலும் வெளியாருக்காகக் காத்திருப்பது ஒப்பீட்டளவில் விறுவிறுப்பானதாக இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்தோடு நிலமை தலைகீழாகத் தொடங்கி விட்டது. இப்போதுள்ள ரணில் – மைத்திரி அரசாங்கமானது மேற்கின் குழந்தை. எனவே தனது குழந்தையை மேற்குப் பாதுகாக்குமா? அல்லது அந்தக் குழந்தையைப் பெறுவதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்திய தமிழர்களைப் பாதுகாக்குமா? ராஜபக்ஷ இருந்தவரை அவர் உள்நாட்டில் பலமாகக் காணப்பட்டார்.அதே சமயம். அவர் அனைத்துலக அரங்கில் மிகவும் பலவீனமானவராகக் காணப்பட்டார். எனவே அவர் பலவீனமாக இருந்த ஒரு களத்தில் அவரை எதிர் கொள்வது தமிழ் மக்களுக்கு வசதியாக இருந்தது. ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாகி விட்டது. ரணில் – மைத்திரி அரசாங்கமானது அனைத்துலக அரங்கில் மிகவும் கவர்ச்சியோடு காணப்படுகின்றது. இவ்வாறு அரசாங்கம் பலமாகக் காணப்படும் ஒர் அரங்கில் தமிழர்கள் இனி என்ன செய்ய வேண்டியிருக்கும்? இம்முறை ஜெனீவாவிற்கு போன தமிழர்கள் இதற்குரிய வீட்டு வேலைகளை செய்து கொண்டு போனார்களா? ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரான செயிட் அல்ஹூசைனின் வாய்மூல அறிக்கையானது இலங்கை தொடர்பான கூர்மையான அவதானங்களின் தொகுப்பாக காணப்படுகின்றது. அது முதலாவதாக இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டுகிறது. அதன் பின் அதன் செயற்பாடுகளில் உள்ள போதாமைகளைச் சுட்டிக் காட்டுகிறது. ஆனால் அவை கூட கண்டிக்கும் தொனியிலானவை அல்ல. இணைந்து செயற்படும் ஒரு தரப்பிற்கு ஆலோசனை கூறும் ஒரு தொனியிலேயே அந்த அறிக்கை அமைந்திருக்கிறது. அந்த அறிக்கைக்குப் பின் கருத்து தெரிவித்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் அதே தொனியோடுதான் இலங்கை அரசாங்கத்தை அணுகியிருக்கிறார்கள். அரசாங்கத்திற்கு நோகக் கூடிய விமர்சனங்கள் எதுவும் வெளிப்படையாக வைக்கப்படவில்லை. இத்தனைக்கும் அரசாங்கம் கடந்த ஆண்டு ஜெனீவாவில் வழங்கிய முக்கியமான வாக்குறுதிகளிலிருந்தும் பின்வாங்கி இருக்கிறது. ஜெனிவாக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருக்கும் பொழுதே யுத்தத்தை நடாத்திய தளபதி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருக்கிறார். அக் கட்சியின் தலைவரும் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க சில நாட்களுக்கு முன் அரசியலமைப்பு மாற்றங்களைப் பற்றிப் பேசும் பொழுது பௌத்தத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் முதன்மை ஸ்தானத்தை நீக்கப் போவதில்லை என்ற தொனிப்படக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதாவது ஐ.நா. கூட்டத் தொடர் நடந்துகொண்டிருக்கும் பொழுதே உள்நாட்டில் சிங்கள வாக்காளர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் அரசாங்கம் செயற்பட்டிருக்கிறது. இதனால் ஐ.நாவில் தனக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று நம்பும் அளவிற்கு அரசாங்கத்தின் பேரம் பேசும் சக்தி அதிகமாகக் காணப்படுகிறது. ஐ.நா இந்த அரசாங்கத்தை பாதுகாக்கும் என்பதைத்தான் அல்ஹூசைனின் அறிக்கையும் காட்டி நிற்கிறது. சில முக்கிய மாற்றங்களைக் காட்ட அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் தேவை என்று அல்ஹூசைன் கூறுகின்றார். அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்கும் ஐ.நாவில் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? அல்ஹூசைனின் அறிக்கையானது நிலைமாறுகால நீதி தொடர்பில் அரசாங்கத்தின் செய்முறைகளைக் குறித்து விரிவான தகவல்களைப் பெற்று தயாரிக்கப்பட்ட ஒன்றாகத் காணப்படுகிறது. நிலைமாறுகால நீதிச் செய்முறைகளிலும்; நல்லிணக்க பொறிமுறைகளிலும் காணப்படும் போதாமைகளையும், தாமதங்களையும் அது விபரமாக அறிக்கையிடுகின்றது. ஆனால் இலங்கைத் தீவின் நிலைமாறு கால நீதிச் சூழல் ஏன் அவ்வாறு உள்ளது என்பதற்கான மூல காரணத்தை அந்த அறிக்கை வெளிப்படையாக தொடவேயில்லை. அந்த மூல காரணத்தை தொடாமல் இலங்கை தீவின் நிலைமாறு கால நீதிச் சூழலை அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு போக முடியாது. எனது கட்டுரைகளில் இதற்கு முன்னரும் கூறப்பட்டது போல சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனையில் ஏற்படும் மாற்றமே இலங்கைத் தீவைப் பொறுத்த வரை மெய்யான மாற்றமாகும். அதில் மாற்றம் வராத வரை எந்த ஒரு நிலைமாறு காலமும் மேலோட்டமானது. மேலோட்டமான நிலைமாறு காலச் சூழலை மேலோட்டமான பொறிமுறைகளுக்கு ஊடாகவே அரசாங்கம் கடந்து செல்ல எத்தனிக்கும். ஒரு அரசியல் செய்முறையை என்.ஜி.ஓக்களின் புரெஜெக்ற்றாகக் குறுக்க எத்தனிக்கும். சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது ஓர் அரசியல் தீர்மானமாகும். அந்த மாற்றம் ஏற்பட்டால்தான் இலங்கை தீவின் ஜனநாயக சூழலை அதன் மெய்யான பொருளில் பல்லினத் தன்மை மிக்கதாக கட்டியெழுப்பலாம். அப்பொழுதுதான் அரசியலமைப்பும் பல்லினத் தன்மைமிக்க ஒரு நாட்டை கட்டியெழுப்பும் விதத்தில் மாற்றப்படும். எனவே மூல காரணத்தில் மாற்றம் வராமல் நிலைமாறு கால நீதிச் சூழலையும் நல்லிணக்க பொறிமுறைகளையும் அவற்றின் அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க முடியாது. ரணில் விக்கிரமசிங்க பௌத்தத்திற்கு வழங்கப்படும் முதன்மையை மாற்றப் போவதில்லை என்று கூறியிருக்கும் ஒரு பின்னணியில் அந்த சிங்கள பௌத்த மேலாண்மை வாதத்தை பாதுகாக்கும் ஒரு போரை வழிநடத்திய தளபதியை ஆளும் கட்சிக்குள் இணைத்துக் கொண்டிருக்கும் ஓர் அரசியல் சூழலில் நல்லிணக்க பொறிமுறைகளையும், நிலைமாறு கால நீதிச் செய்முறைகளையும் அல்ஹூசைன் நம்புவது போல மேம்படுத்த முடியுமா? அதற்காக வழங்கப்படும் கால அவகாசமானது சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம் தன்னை சுதாரித்துக் கொள்வதற்கு உதவுமா? அல்லது அது தன்னை சுய விசாரணை செய்து கொள்ள உதவுமா? கடந்த 18 மாத கால மாற்றங்களை வைத்துப் பார்த்தால் சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம் தன்னை சுதாகரித்துக் கொள்கிறது என்றே தோன்றுகிறது. அதே சமயம் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோ மேலும் தளர்வுறும் நிலைமையே வளர்;ந்து வருகிறது. நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பில் பொதுசனங்களின் பங்களிப்பை அல்ஹூசைனின் அறிக்கை அழுத்திக் கூறுகிறது. இவ்வாறு பொது மக்களின் கருத்தை அறியும் செயலணியின் சந்திப்புக்களின் பொழுது என்ன நடக்கிறது?இங்கு இரண்டு உதாரணங்களைச் சுட்டிக் காட்டலாம். 1. தமிழ் மக்கள் மத்தியில் கருத்தறியும் சந்திப்புக்கள் நடத்தப்படும் பொழுது பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் தமக்கு நீதி வேண்டும் என்பதில் ஓர்மமாக இருப்பதை காண முடிகிறது. அதே சமயம் இன்னொரு பகுதியினர் எங்களுக்கு உடனடியாக உதவி தேவை என்று கேட்பதையும் காண முடிகிறது. உழைக்கும் நபரை இழந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் உதவிகளையே அதிகம் எதிர்பார்ப்பது தெரிகிறது. அந்த உதவிகளும் கூட மிகவும் அற்பமானவைகள். அப்படி உதவிகள் கிடைத்தால் அவற்றோடு திருப்திப்பட்டு விடக்கூடிய ஒரு மனோநிலையை ஆங்காங்கே காண முடிகிறது. நிலைமாறு கால நீதிச் செய்முறையின் கீழ் தங்களுக்கு உரிய உதவி தரப்பட வேண்டும் என்பதும் அது தங்களுக்குரிய ஓர் உரிமை என்பதும் அந்த மக்களில் அநேகருக்கு தெரியாது. மேற்படி சந்திப்புக்களை ஒழுங்குபடுத்தும் என்.ஜி.ஓக்கள் அல்லது சிவில் அமைப்புக்கள், அல்லது மனித உரிமை அமைப்புக்கள் போன்றவற்றைச் சேர்ந்தவர்களும் இது விடயத்தில் அந்த மக்களை போதியளவு விழிப்பூட்டியதாக தெரியவில்லை. மாறாக அற்ப சொற்ப உதவிகளோடு ஆறுதலடையக் கூடிய ஒரு மனோ நிலை படிப்படியாக உருவாகி வருகின்றது. அந்தளவிற்கு அந்த மக்கள் நொந்து போய் விட்டார்கள். தொடர்ச்சியான சந்திப்புக்கள், திரும்பத் திரும்பப் பதிவுகள் போன்றவற்றால் அவர்கள் சலிப்பும், களைப்பும், விரக்தியும் அடைந்து விட்டார்கள். இது இப்படியே போனால் எங்களுக்கு நீதி வேண்டாம் நிவாரணம் கிடைத்தால் போதும் என்று கூறும் ஒரு நிலைமை வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டி உள்ளது இது முதலாவது. 2. இரண்டாவது உதாரணம் மன்னிப்பு பற்றியது. தற்பொழுது நடைபெற்றுவரும் கருத்தறியும் சந்திப்புக்களின் போது ஒரு தொகுதி கேள்விகள் பொது மக்களிடம் கேட்கப்படுகின்றன. இவற்றில் குற்றம் சாற்றப்பட்டவர்களை மன்னிக்கலாமா? என்ற தொனியிலான கேள்வியும் அடங்கும். சில மாதங்களுக்கு முன்பு களனியில் ஒரு கிறிஸ்த்தவக் குரு மடத்தில் இதையொத்த வேறொரு சந்திப்பு நடந்திருக்கிறது. அதில் சிவில் சமூக பிரதிநிதிகள் பங்குபற்றியிருக்கிறார்கள். வளவாளராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் உரையாற்றியுள்ளார். அவர் மன்னிப்பு தொடர்பில் தென்னாபிரிக்க உதாரணம் ஒன்றை சுட்டிக் காட்டியுள்ளார். தென்னாபிரிக்காவில் ஒரு விசாரணையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும் குற்றவாளிகளையும் வைத்துக்கொண்டு உறவினர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம். ‘குற்றவாளிகளை மன்னிக்க வேண்டுமா அல்லது தண்டிக்க வேண்டுமா’? என்று அதற்கு ஒரு தாய் பின்வருமாறு பதிலளித்தாராம்….. ‘இக்குற்றவாளியைக் காணும் போதெல்லாம என்னுடைய மகனின்நினைவே எனக்கு வருகிறது என்னுடைய பிள்ளை இப்பொழுது உயிருடன் இருந்திருந்தால் எனக்கு எதையெல்லாம் செய்வானோ அந்தச் சேவைகளை இந்தக் குற்றவாளி எனக்கு மாதத்தில் இரு தடவை செய்து தரட்டும்’ என்று மேற்படி உதாரணத்தை அந்த வளவாளர் சுட்டிக் காட்டிய பின் வடக்கிலிருந்து சென்ற ஒரு சிவில் சமூகப் பிரதிநிதி எழுந்து நின்று பின்வருமாறு கேட்டாராம். ‘மகனை இழந்த தாய்க்கு நீங்கள் கூறும் அதே உதாரணத்தை கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கும் பொருத்திப் பார்க்க முடியுமா?’ என்ற இந்தக் கேள்விக்கு வளவாளர் பொருத்தமான பதில் எதையும் கூற வில்லையாம். அதே சமயம் மற்றொரு கருத்தறியும் சந்திப்பில் மன்னிப்பு தொடர்பாகக் கேட்ட பொழுது ஒரு தாய் சொன்னார் ‘இவற்றைபற்றியெல்லாம் எனக்கு அக்கறையில்லை என்னுடைய பிள்ளையை எனக்குத் தந்தால் போதும்’ என்று. இதுமட்டுமல்ல இதை விட கொடுமையான ஒரு வளர்ச்சியும் மேற் கண்ட சந்திப்புக்களின் போது அவதானிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெற்றோரில் பலர் படிப்படியாக மனப் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். தேற்றப்படவியலா துக்கமும் இழுபட்டுச் செல்லும் நீதியும் சலிப்பும் களைப்பும் ஏமாற்றமும் வறுமையும் அவர்களை (traumatized) மன வடுப்பட்டவர்களாய் மாற்றத் தொடங்கி விட்டன. அதாவது சாட்சியங்கள் சோரத் தொடங்கி விட்டார்கள், தளரத் தொடங்கி விட்டார்கள். ஒரு பகுதியினர் நோயாளியாகிக் கொண்டிருக்கிறார்கள், ஒரு பகுதியினர் வயதிற்கு முந்தி முதுமையுற்று விட்டார்கள். இதுதான் இழுபட்டுச் செல்லும் நீதியின் விளைவு. இத்தகையதோர் சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் உளவியற் சூழலில் அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த மேலாதிக்கமானது குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பதற்கும், சாட்சிகளை சோர வைப்பதற்கும் அல்லது பின்வாங்கச் செய்வதற்கும் அல்லது நீதிக்கு பதிலாக நிவாரணத்தை கேட்கும் ஓர் நிலைமையை நோக்கி சாட்சிகளை தள்ளுவதற்கும் இக்கால அவகாசத்தை பயன்படுத்தாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதே சமயம் இவ்வாறு அரசாங்கம் தன்னை சுதாரித்துக் கொள்வதற்கு மேலும் கால அவகாசத்தை வழங்கும் ஓர் உலகச் சூழலை தமிழ் மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்?இனியும் வெளியாரை நோக்கி காத்திருக்கப் போகிறார்களா? அல்லது உள்நோக்கி திரும்பப் போகிறார்களா? இது தொடர்பில் அண்மையில் தமிழ் சிவில் சமூக அமையைத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் சொன்ன கருத்து கவனிப்புக்குரியது. ‘நாங்கள் வெளிநோக்கி செயற்படுவதை விடவும் கூடுதலான பட்சம் உள்நோக்கியே செயற்பட வேண்டி உள்ளது’. அதாவது தமிழ் மக்களை பலப்படுத்தவும், ஸ்திரப்படுத்தவும், குணமாக்கவும், ஐக்கியப்படுத்தவும் வேண்டியிருக்கிறது என்பதையே இந்த ஆண்டின் ஜெனிவா கூட்டத் தொடர் உணர்த்தி நிற்கிறது.ஜெனீவாவுக்குப் போதல்: – நிலாந்தன்:-         தமிழ் மக்கள் காசிக்கு போவதுண்டு. கதிர்காமத்திற்கு போவதுண்டு, மடுவிற்கு போவதுண்டு. அவையெல்லாம் புன்ணியம் தேடிப் போகும் மத யாத்திரைகள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தழிழர்களுடைய வாழ்க்கையில் இணைந்திருக்கும் ஒரு புதிய அம்சம் ‘ஜெனீவாவுக்கு போதல்.’ இது நீதி தேடிப் போகும் ஓர் அரசியல் யாத்திரை. ஜெனீவாவிற்கு தாயகத்திலிருந்தும் ஆட்கள் போகிறார்கள். டயாஸ்பொறாவிலிருந்தும் போகிறார்கள். அரசியல் வாதிகள் போகிறார்கள் செயற்பாட்டாளர்கள், சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் போகிறார்கள் ஊடகவியலாளர்கள் போகிறார்கள் என். ஜி. ஓ. அலுவலர்கள் போகிறார்கள். இவர்களோடு சில சமயங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தும் சிலர் ஜெனீவாவிற்கு போய் வருகின்றார்கள். இதில் சிலர் ஜெனீவாவிற்கு போவதுண்டு. திரும்பி வருவதில்லை. அங்கேயே தஞ்சம் கோரி விடுகிறார்கள்.       இவ்வாறு ஜெனீவாவுக்குப் போதல் எனப்படுவது வெளியாருக்காகக் காத்திருக்கும் ஓர் அரசியலின் ஒரு பகுதிதான். வெளியாருக்காகக் காத்திருத்தல் எனப்படுவது 2009 மேக்கு முன்னரும் இருந்தது. அப்பொழுது களத்தில் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் 2009 மேக்குப் பின்னர் வெளியாருக்காகக் காத்திருத்தல் என்பதே தமிழ் அரசியலின் பெரும் பகுதியாக மாறி விட்டது. இதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம்.      1.    தாயகத்தில் நிலமைகள் இறுக்கமாக இருந்தபடியால் தாயகத்துக்கு வெளியில் அரசியலை அச்சமின்றி முன்னெடுக்கலாம் என்றிருந்த ஒரு நிலை.   2.    தமிழ் டயஸ்பொறாவானது தமிழ்தேசியத்தின் கூர்முனை போல மேலெழுந்தமை.   3.    சீனசார்பு மகிந்தவைக் கவிழ்ப்பதற்கு தமிழர்களுடைய பிரச்சினையை மேற்கு நாடுகள் கையிலெடுத்தமை.   4.    தமிழர்களுடைய பிரச்சினையை மகிந்தவுக்கு எதிரான ஒரு கருவியாகக் கையாள்வதற்காக மேற்கு நாடுகள் தமிழ் டயஸ்பொறாவை அதன் வல்லமைக்கு மீறி ஊதிப் பெரிதாக்கிக் காட்டியமை.   மேற் சொன்ன பிரதான காரணங்களினால் தமிழ் அரசியலானது மேற்கை நோக்கி அதாவது வெளிநோக்கி எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஒன்றாக மாறியது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஜெனிவாக் கூட்டத் தொடரின் போதும் இந்த காத்திருப்பு மேலும் மேலும் அதிகரித்து வந்தது. இதன் ஒரு பகுதியே ஜெனிவாவுக்குப் போதல் ஆகும்.   கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி வரையிலும் வெளியாருக்காகக் காத்திருப்பது ஒப்பீட்டளவில் விறுவிறுப்பானதாக இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்தோடு நிலமை தலைகீழாகத் தொடங்கி விட்டது. இப்போதுள்ள ரணில் – மைத்திரி அரசாங்கமானது மேற்கின்  குழந்தை. எனவே தனது குழந்தையை மேற்குப் பாதுகாக்குமா? அல்லது அந்தக் குழந்தையைப் பெறுவதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்திய தமிழர்களைப் பாதுகாக்குமா?   ராஜபக்ஷ இருந்தவரை அவர் உள்நாட்டில் பலமாகக் காணப்பட்டார்.அதே சமயம். அவர் அனைத்துலக அரங்கில் மிகவும் பலவீனமானவராகக் காணப்பட்டார். எனவே அவர் பலவீனமாக இருந்த ஒரு களத்தில் அவரை எதிர் கொள்வது தமிழ் மக்களுக்கு வசதியாக இருந்தது. ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாகி விட்டது. ரணில் – மைத்திரி அரசாங்கமானது அனைத்துலக அரங்கில் மிகவும் கவர்ச்சியோடு காணப்படுகின்றது. இவ்வாறு அரசாங்கம் பலமாகக் காணப்படும் ஒர் அரங்கில் தமிழர்கள் இனி என்ன செய்ய வேண்டியிருக்கும்? இம்முறை ஜெனீவாவிற்கு போன தமிழர்கள் இதற்குரிய  வீட்டு வேலைகளை செய்து கொண்டு போனார்களா?   ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரான செயிட் அல்ஹூசைனின் வாய்மூல அறிக்கையானது இலங்கை தொடர்பான கூர்மையான அவதானங்களின் தொகுப்பாக காணப்படுகின்றது. அது முதலாவதாக இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டுகிறது. அதன் பின் அதன் செயற்பாடுகளில் உள்ள போதாமைகளைச் சுட்டிக் காட்டுகிறது. ஆனால் அவை கூட கண்டிக்கும் தொனியிலானவை அல்ல. இணைந்து செயற்படும் ஒரு தரப்பிற்கு ஆலோசனை கூறும் ஒரு தொனியிலேயே அந்த அறிக்கை அமைந்திருக்கிறது. அந்த அறிக்கைக்குப் பின் கருத்து தெரிவித்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் அதே தொனியோடுதான் இலங்கை அரசாங்கத்தை அணுகியிருக்கிறார்கள். அரசாங்கத்திற்கு நோகக் கூடிய விமர்சனங்கள் எதுவும் வெளிப்படையாக வைக்கப்படவில்லை. இத்தனைக்கும் அரசாங்கம் கடந்த ஆண்டு ஜெனீவாவில் வழங்கிய முக்கியமான வாக்குறுதிகளிலிருந்தும் பின்வாங்கி இருக்கிறது. ஜெனிவாக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருக்கும் பொழுதே யுத்தத்தை நடாத்திய தளபதி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருக்கிறார். அக் கட்சியின் தலைவரும் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க சில நாட்களுக்கு முன் அரசியலமைப்பு மாற்றங்களைப் பற்றிப் பேசும் பொழுது பௌத்தத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் முதன்மை ஸ்தானத்தை நீக்கப் போவதில்லை என்ற தொனிப்படக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதாவது ஐ.நா. கூட்டத் தொடர் நடந்துகொண்டிருக்கும் பொழுதே உள்நாட்டில் சிங்கள வாக்காளர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் அரசாங்கம் செயற்பட்டிருக்கிறது. இதனால் ஐ.நாவில் தனக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று நம்பும் அளவிற்கு அரசாங்கத்தின் பேரம் பேசும் சக்தி அதிகமாகக் காணப்படுகிறது.   ஐ.நா இந்த அரசாங்கத்தை பாதுகாக்கும் என்பதைத்தான் அல்ஹூசைனின் அறிக்கையும் காட்டி நிற்கிறது. சில முக்கிய மாற்றங்களைக் காட்ட அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் தேவை என்று அல்ஹூசைன் கூறுகின்றார். அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்கும் ஐ.நாவில் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?       அல்ஹூசைனின் அறிக்கையானது நிலைமாறுகால நீதி தொடர்பில் அரசாங்கத்தின் செய்முறைகளைக் குறித்து விரிவான தகவல்களைப் பெற்று தயாரிக்கப்பட்ட ஒன்றாகத் காணப்படுகிறது. நிலைமாறுகால நீதிச் செய்முறைகளிலும்; நல்லிணக்க பொறிமுறைகளிலும் காணப்படும் போதாமைகளையும், தாமதங்களையும் அது விபரமாக அறிக்கையிடுகின்றது. ஆனால் இலங்கைத் தீவின் நிலைமாறு கால நீதிச் சூழல் ஏன் அவ்வாறு உள்ளது என்பதற்கான மூல காரணத்தை அந்த அறிக்கை வெளிப்படையாக தொடவேயில்லை. அந்த மூல காரணத்தை தொடாமல் இலங்கை தீவின் நிலைமாறு கால நீதிச் சூழலை அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு போக முடியாது. எனது கட்டுரைகளில் இதற்கு முன்னரும் கூறப்பட்டது போல சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனையில் ஏற்படும் மாற்றமே இலங்கைத் தீவைப் பொறுத்த வரை மெய்யான மாற்றமாகும். அதில் மாற்றம் வராத வரை எந்த ஒரு நிலைமாறு காலமும் மேலோட்டமானது. மேலோட்டமான நிலைமாறு காலச் சூழலை மேலோட்டமான பொறிமுறைகளுக்கு ஊடாகவே அரசாங்கம் கடந்து செல்ல எத்தனிக்கும். ஒரு  அரசியல் செய்முறையை என்.ஜி.ஓக்களின் புரெஜெக்ற்றாகக் குறுக்க எத்தனிக்கும்.   சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது ஓர் அரசியல் தீர்மானமாகும். அந்த மாற்றம் ஏற்பட்டால்தான் இலங்கை தீவின் ஜனநாயக சூழலை அதன் மெய்யான பொருளில் பல்லினத் தன்மை மிக்கதாக கட்டியெழுப்பலாம். அப்பொழுதுதான் அரசியலமைப்பும் பல்லினத் தன்மைமிக்க ஒரு நாட்டை கட்டியெழுப்பும் விதத்தில் மாற்றப்படும். எனவே மூல காரணத்தில் மாற்றம் வராமல் நிலைமாறு கால நீதிச் சூழலையும் நல்லிணக்க பொறிமுறைகளையும் அவற்றின் அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க முடியாது.   ரணில் விக்கிரமசிங்க பௌத்தத்திற்கு வழங்கப்படும் முதன்மையை மாற்றப் போவதில்லை என்று கூறியிருக்கும் ஒரு பின்னணியில் அந்த சிங்கள பௌத்த மேலாண்மை வாதத்தை பாதுகாக்கும் ஒரு போரை வழிநடத்திய தளபதியை ஆளும் கட்சிக்குள் இணைத்துக் கொண்டிருக்கும் ஓர் அரசியல் சூழலில் நல்லிணக்க பொறிமுறைகளையும், நிலைமாறு கால நீதிச் செய்முறைகளையும் அல்ஹூசைன் நம்புவது போல மேம்படுத்த முடியுமா? அதற்காக வழங்கப்படும் கால அவகாசமானது சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம் தன்னை சுதாரித்துக் கொள்வதற்கு உதவுமா? அல்லது அது தன்னை சுய விசாரணை செய்து கொள்ள உதவுமா?       கடந்த 18 மாத கால மாற்றங்களை வைத்துப் பார்த்தால் சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம் தன்னை சுதாகரித்துக் கொள்கிறது என்றே தோன்றுகிறது. அதே சமயம் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோ மேலும் தளர்வுறும் நிலைமையே வளர்;ந்து வருகிறது.       நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பில் பொதுசனங்களின் பங்களிப்பை அல்ஹூசைனின் அறிக்கை அழுத்திக் கூறுகிறது. இவ்வாறு பொது மக்களின் கருத்தை அறியும் செயலணியின் சந்திப்புக்களின் பொழுது என்ன நடக்கிறது?இங்கு இரண்டு உதாரணங்களைச் சுட்டிக் காட்டலாம்.   1.    தமிழ் மக்கள் மத்தியில் கருத்தறியும் சந்திப்புக்கள் நடத்தப்படும் பொழுது பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் தமக்கு நீதி வேண்டும் என்பதில் ஓர்மமாக இருப்பதை காண முடிகிறது. அதே சமயம் இன்னொரு பகுதியினர் எங்களுக்கு உடனடியாக உதவி தேவை என்று கேட்பதையும் காண முடிகிறது. உழைக்கும் நபரை இழந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் உதவிகளையே அதிகம் எதிர்பார்ப்பது தெரிகிறது. அந்த உதவிகளும் கூட மிகவும் அற்பமானவைகள். அப்படி உதவிகள் கிடைத்தால் அவற்றோடு திருப்திப்பட்டு விடக்கூடிய ஒரு மனோநிலையை ஆங்காங்கே காண முடிகிறது. நிலைமாறு கால நீதிச் செய்முறையின் கீழ் தங்களுக்கு உரிய உதவி தரப்பட வேண்டும் என்பதும் அது தங்களுக்குரிய ஓர் உரிமை என்பதும் அந்த மக்களில் அநேகருக்கு தெரியாது. மேற்படி சந்திப்புக்களை ஒழுங்குபடுத்தும் என்.ஜி.ஓக்கள் அல்லது சிவில் அமைப்புக்கள், அல்லது மனித உரிமை அமைப்புக்கள் போன்றவற்றைச் சேர்ந்தவர்களும் இது விடயத்தில் அந்த மக்களை போதியளவு விழிப்பூட்டியதாக தெரியவில்லை. மாறாக அற்ப சொற்ப உதவிகளோடு ஆறுதலடையக் கூடிய ஒரு மனோ நிலை படிப்படியாக உருவாகி வருகின்றது. அந்தளவிற்கு அந்த மக்கள் நொந்து போய் விட்டார்கள். தொடர்ச்சியான சந்திப்புக்கள், திரும்பத் திரும்பப் பதிவுகள் போன்றவற்றால் அவர்கள் சலிப்பும், களைப்பும், விரக்தியும் அடைந்து விட்டார்கள். இது இப்படியே போனால் எங்களுக்கு நீதி வேண்டாம் நிவாரணம் கிடைத்தால் போதும் என்று கூறும் ஒரு நிலைமை வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டி உள்ளது இது முதலாவது.  2.    இரண்டாவது உதாரணம் மன்னிப்பு பற்றியது. தற்பொழுது நடைபெற்றுவரும் கருத்தறியும் சந்திப்புக்களின் போது ஒரு தொகுதி கேள்விகள் பொது மக்களிடம் கேட்கப்படுகின்றன. இவற்றில் குற்றம் சாற்றப்பட்டவர்களை மன்னிக்கலாமா? என்ற தொனியிலான கேள்வியும் அடங்கும். சில மாதங்களுக்கு முன்பு களனியில்  ஒரு கிறிஸ்த்தவக் குரு மடத்தில் இதையொத்த வேறொரு சந்திப்பு நடந்திருக்கிறது. அதில் சிவில் சமூக பிரதிநிதிகள் பங்குபற்றியிருக்கிறார்கள். வளவாளராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் உரையாற்றியுள்ளார். அவர் மன்னிப்பு தொடர்பில் தென்னாபிரிக்க உதாரணம் ஒன்றை சுட்டிக் காட்டியுள்ளார். தென்னாபிரிக்காவில் ஒரு விசாரணையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும் குற்றவாளிகளையும் வைத்துக்கொண்டு உறவினர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம். ‘குற்றவாளிகளை மன்னிக்க வேண்டுமா அல்லது தண்டிக்க வேண்டுமா’? என்று அதற்கு ஒரு தாய் பின்வருமாறு பதிலளித்தாராம்….. ‘இக்குற்றவாளியைக் காணும் போதெல்லாம என்னுடைய மகனின்நினைவே எனக்கு வருகிறது என்னுடைய பிள்ளை இப்பொழுது உயிருடன் இருந்திருந்தால் எனக்கு எதையெல்லாம் செய்வானோ அந்தச் சேவைகளை இந்தக் குற்றவாளி எனக்கு மாதத்தில்  இரு தடவை செய்து தரட்டும்’ என்று மேற்படி உதாரணத்தை அந்த வளவாளர் சுட்டிக் காட்டிய பின் வடக்கிலிருந்து சென்ற ஒரு சிவில் சமூகப் பிரதிநிதி எழுந்து நின்று பின்வருமாறு கேட்டாராம். ‘மகனை இழந்த தாய்க்கு நீங்கள் கூறும் அதே உதாரணத்தை கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கும் பொருத்திப் பார்க்க முடியுமா?’ என்ற இந்தக் கேள்விக்கு வளவாளர் பொருத்தமான பதில் எதையும் கூற வில்லையாம். அதே சமயம் மற்றொரு கருத்தறியும் சந்திப்பில் மன்னிப்பு தொடர்பாகக் கேட்ட பொழுது ஒரு தாய் சொன்னார் ‘இவற்றைபற்றியெல்லாம் எனக்கு அக்கறையில்லை என்னுடைய பிள்ளையை எனக்குத் தந்தால் போதும்’ என்று.   இதுமட்டுமல்ல இதை விட கொடுமையான ஒரு வளர்ச்சியும் மேற் கண்ட சந்திப்புக்களின் போது அவதானிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெற்றோரில் பலர் படிப்படியாக மனப் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். தேற்றப்படவியலா துக்கமும் இழுபட்டுச் செல்லும் நீதியும் சலிப்பும் களைப்பும் ஏமாற்றமும் வறுமையும் அவர்களை  (traumatized)  மன வடுப்பட்டவர்களாய் மாற்றத் தொடங்கி விட்டன. அதாவது சாட்சியங்கள் சோரத் தொடங்கி விட்டார்கள், தளரத் தொடங்கி விட்டார்கள். ஒரு பகுதியினர் நோயாளியாகிக் கொண்டிருக்கிறார்கள், ஒரு பகுதியினர் வயதிற்கு முந்தி முதுமையுற்று விட்டார்கள்.   இதுதான் இழுபட்டுச் செல்லும் நீதியின் விளைவு. இத்தகையதோர் சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் உளவியற் சூழலில் அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த மேலாதிக்கமானது குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பதற்கும், சாட்சிகளை சோர வைப்பதற்கும் அல்லது பின்வாங்கச் செய்வதற்கும் அல்லது நீதிக்கு பதிலாக நிவாரணத்தை கேட்கும் ஓர் நிலைமையை நோக்கி சாட்சிகளை தள்ளுவதற்கும் இக்கால அவகாசத்தை பயன்படுத்தாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?   அதே சமயம் இவ்வாறு அரசாங்கம் தன்னை சுதாரித்துக் கொள்வதற்கு மேலும் கால அவகாசத்தை வழங்கும் ஓர் உலகச் சூழலை தமிழ் மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்?இனியும் வெளியாரை நோக்கி காத்திருக்கப் போகிறார்களா? அல்லது உள்நோக்கி திரும்பப் போகிறார்களா? இது தொடர்பில் அண்மையில் தமிழ் சிவில் சமூக அமையைத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் சொன்ன கருத்து கவனிப்புக்குரியது. ‘நாங்கள் வெளிநோக்கி செயற்படுவதை விடவும் கூடுதலான பட்சம் உள்நோக்கியே செயற்பட வேண்டி உள்ளது’. அதாவது தமிழ் மக்களை பலப்படுத்தவும், ஸ்திரப்படுத்தவும், குணமாக்கவும், ஐக்கியப்படுத்தவும் வேண்டியிருக்கிறது என்பதையே இந்த ஆண்டின் ஜெனிவா கூட்டத் தொடர் உணர்த்தி நிற்கிறது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர், நீதியை எதிர்பார்த்த தமிழினத்திற்கு வழமைபோன்றதொரு கூட்டத் தொடராகவே நடந்து
முடிந்துள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐநா வெளிப்படுத்தியிருக்கும் அதிருப்தி என்பது  தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசு முன்னெடுக்க தயங்கும் செயற்பாடுகளின் பெறுபேறே. இலங்கை அரசு, நீதி, ஜனநாயகம், சமத்துவம், வெளிப்படைதன்மை, பொறுப்புக்கூறுதல் முதலியவற்றில் தன்னைப் புதுப்பிக்க மறுக்கும் செயற்பாடே. தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் பலவற்றிலும் இலங்கையின் புதிய அரசு, பழைய அரசின் மனநிலையிலிருந்து விலக மறுத்துள்ளமையும் இங்கு புலப்படுகிறது.

ஈழத் தமிழ் மக்கள் சந்தித்த மாபெரும் இனப்படுகொலையை ஐ.நா மனித உரிமைப் பேரவை இம்முறையும் நீதியாக அணுகவில்லை. வெறுமனே போர்க்குற்றம் என்றும் மனித உரிமை மீறல் என்றும் இப் பிரச்சினையை அணுகும்வரையில் இலங்கையின் செயற்பாடுகள் இப்படியே அமையப்போகின்றன. ஏற்கனவே ஒரு சர்வதேச விசாரணையை நடத்தி, அதில் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பிலும் அவர்கள் அழிக்கப்பட்ட விதம் தொடர்பிலும் தகவல்களைப் பெற்ற ஐ.நா அதன் உண்மையான கோரத்திலிருந்து இந்தப் பிரச்சினையை அணுகுவதில் விலகியுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை அரசு குறித்து மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்ட பின்னர், அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட அந்த தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரனை வழங்கியது. தம்மால் அனுசரனை வழங்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தியது என்றால், அதற்கு ஏமாற்றம் தரக்கூடிய பதிலையே நடைமுறையில் காண முடிந்தது. முக்கியமாக இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும், சித்திரவதைகளும் கைதுகளும் தொடர்வதாக 32ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளர் தன் வாய்மொழிமூல அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காணிகளை மீளளித்தல், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களின் விடுதலை ஆகிய விடயங்களில் இலங்கை அரசு போதிய முன்னேற்றத்தை அடையவில்லை என்றும் ஆணையாளரின் ஒன்பது பக்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசு அகற்றுவதாக கூறியபோதும் அதனை இதுவரையில்  நீக்கவில்லை என்பதையும் அது தொடர்பில் அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க மாட்டோம் என்றும் அதனை வேறு பெயரில் திருத்தப் போகிறோம் என்றும் அரசு கூறினாலும் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் கைது செய்யப்படும் நிலை நிலவுகிறது.

போர்க்காலத்திற்கு பிந்தைய நீதி, அரசியல் சட்ட சீர் திருத்தம், பாதுகாப்பு சீர்திருத்தம் என்பவற்றையும் மனித உரிமை பேரவை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச தரமான அரசியல் சட்டம் உருவாக்கப்படும் என்று இலங்கை அரசு கூறியதாகவும் அதனை நிறைவேற்றவில்லை என்றும் மனித உரிமை பேரவை ஆணையாளர் அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் அரசின் செயற்பாடு  மந்தமடைந்துள்ளது. இனப்பிரச்சினைக்கு அடிப்படையான, ஏற்கனவே இருந்த அரசியல் அமைப்பினை திருத்தி உருவாக்கும் முயற்சியிலேயே இலங்கை அரசு ஆர்வம் காட்டுகிறது. அத்துடன் கருத்தறியும் அமர்வுகள் மூலம் வடகிழக்கில் தமிழ் மக்கள் முன்வைத்த எதிர்பார்ப்புக்கள் அதில் பலவும் கருத்தில் கொள்ளப்படாத நிலையும் உள்ளது.

இதேவேளை பாலியல் வன்முறைகள் தொடர்வதாகவும், இராணுவத்தினரின் கண்காணிப்பு மற்றும் தொந்தரவுகள் தொடர்வதாகவும் அவரது அறிக்கை குறிப்பிடுகிறது. இதற்கான அரச கட்டமைப்புக்களும் நிறுவனப்பட்ட கலாசாரங்களும் அகற்றப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தமிழ் மக்களுக்கு எதிரான மனப்போக்கை கொண்ட அரசியல் அமைப்பு மற்றும் பெரும்பான்மை மனப்போக்கு என்பன தொடர்ந்தும் பேணப்படும் விதத்திலேயே இலங்கையின் இராணுவக் கட்டமைப்பும், அரசியல் கட்டமைப்பும், புதிய அரசியல் சட்டமுனைப்புக்களும் காணப்படுகின்றன. இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அடிப்படை புள்ளியை தொட மறுப்பதுவே இந்தச் செயலாகும்.

தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்திய இராணுவத்தினர் அவற்றை மீளளிப்பதில் போதிய செயற்பாடு காணாது என்று மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழிமூல அறிக்கை குறிப்பிடுகிறது. ஐ.நா மனித உரிமை பேரவையை எதிர்கொள்வதற்காக, குறிப்பிட்டளவு காணிகளை இலங்கை அரசு விடுவித்தாலும் இன்னொரு புறத்தில் தமிழர்களின் காணிகளை அபகரிக்குச் செயற்பாடும் தொடர்கிறது. வலி வடக்கில் காணிகளை விடுவித்தபடி முல்லைத்தீவில் அரசு காணிகளை அபகரிக்கிறது என்று வடக்கு மனித உரிமை அமைப்பு ஜெனீவாவில் தெரிவித்திருக்கிறது. இவ்வாறான அணுகுமுறைகள் பழைய மனநிலையை தந்திரமாக பேணும் செயற்பாடே ஆகும்.

இதேவேளை, கலப்பு விசாரணை ஒன்றை பரிந்துரைத்த, ஐ.நா தீர்மானத்தை அனுசரனை வழங்கி நிறைவேற்றிய இலங்கை சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்று கூறி வருகிறது. இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த நிலைப்பாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டதை அவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்ச சர்வதேச விசாரணையை நிராகரித்து உள்ளக விசாரணையை வலியுறுத்திய ஒரு நிலைப்பாட்டுக்கே புதிய அரசும் வந்திருக்கிறது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உள்ளக விசாரணையை நிராகரித்து வருகிறார்கள். காலம் காலமாக தமிழருக்கான நீதி மறுக்கப்பட்ட இலங்கையின் நீதித்துறையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

ஆனால் உள்ளக விசாரணை என்பன் மூலம் குற்றவாளிகளை பாதுகாக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கவே இலங்கையின் புதிய அரசும் முனைகிறது. தமிழ் மக்கள் முழுமையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் கலப்பு விசாரணை ஒன்றுக்குகூட இலங்கை அரசு தயாரில்லை என்று கூறியிருப்பதும் இலங்கை அரசின் பழைய மனநிலையின் வெளிப்பாடே. இது பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பின் குரலுக்கு செவிசாய்க்க இலங்கை அரசு தயாரில்லை என்பதைத்தான் காட்டுகிறது. அத்துடன் பாதிப்பை ஏற்படுத்திய தரப்பினரின் நலன்களை கருத்தில் கொள்ளும் செயற்பாடு என்பது மீண்டும் மீண்டும் இன மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதாகவும் அதனை ஊக்குவிப்பதாகவுமே அமைகிறது.

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் மீண்டும் தனது வாய்மொழி மூல அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் முள்ளிவாய்க்காலில் மாத்திரமின்றி, வரலாறு முழுவதும் நடந்தது இனப்படுகொலை என்றும், அதனை தடுத்து நிறுத்தும் விதமாக சர்வதேச விசாரணை ஒன்றே தேவை என்றும் வலியுறுத்தி வரும் தமிழ் மக்களின் குரலுக்கு ஐ.நா எப்படிச் செவிசாய்க்கவில்லையோ, அப்படியே ஐ.நாவின் கலப்பு விசாரணைக்கு இலங்கையும் செவிசாய்க்காமல் இருக்கிறது.

இலங்கையில் நிலவும் தீவிர இனப் பிரச்சினை தொடர்பிலும், இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பிலும் வெளிப்படையான, உண்மையான, அவசியமான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் இலங்கையும் ஐ.நாவும் ஒரு அணுகுமுறையையே கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே காணிகளை விடுவித்தல், இராணுவ குறைப்பு, புதிய அரசியல் சட்டம், நீதி விசாரணை, பயங்கரவாத தடைச்சட்டம், காணாமல் போனோர் விவகாரம் என்று இனப்பிரச்சினையின் அடிப்படை விடயங்கள் அனைத்தையும் பழைய மனநிலையை மாறாத விதத்தில், திருத்தப்படாத விதத்தில் இலங்கை அரசு கையாள்கிறது. இது, இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அழிக்கப்படவும், உரிமை மறுக்கப்படவும் தொடர்ந்தும் இடமளிக்கும் என்பதே கவலைக்குரியது.

போர் நடந்து ஏழு வருடங்கள். ஆட்சி மாறி இரண்டு வருடங்கள். இந் நிலையில் தன்னை சர்வதேச நெருக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு சிறு சிறு திருத்தங்களையும் சிறு சிறு பேச்சுக்களையும் இலங்கை அரசு நிகழ்த்தியிருந்தாலும் உக்கிரமாயிருக்கும் தமிழர் பிரச்சினைகள் இன்னும் நெருக்கடிக்குள் தள்ளியபடியே இருக்கின்றன. பிரச்சினைகளுக்கான மூல வேர்களை கண்டறிவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்குவதிலும் தான் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கும் வழிகள் திறக்கப்படும். ஆனால் நீதியை மறுத்து பிரச்சினையின் வேர்களை பாதுகாக்கும் செயலே அனைத்து மட்டத்திலும் மறைந்திருக்கிறது. இது இலங்கை தன்னை புதுப்பிக்க மறுக்கும் செயல். தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கி அவர்களின் தேசத்தை அங்கீகரித்து தன்னை புதுப்பிக்காத வகையிலேயே இலங்கை போக்கு காணப்படுகிறது.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More