Home இந்தியா இந்திய – இலங்கை அரச தலைவர்களிடையே சந்திப்பு…

இந்திய – இலங்கை அரச தலைவர்களிடையே சந்திப்பு…

by editortamil

இலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (16) முற்பகல் கோவா Taj Exotica விடுதியில் இடம்பெற்றது.

இலங்கை ஜனாதிபதியை வரவேற்ற இந்திய பிரதமர் , தமது அழைப்பினையேற்று BRICS-BIMSTEC மாநாட்டின் சமாந்தர மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வருகை தந்தமையானது தனக்கும் இந்தியவுக்கும் BIMSTEC பிராந்தியத்திற்கும் பாரிய பலமென்றும் தெரிவித்தார்.

இலங்கையானது தென்னாசிய பிராந்தியத்தில் தற்போது முக்கியமான பங்கு வகித்து வருகின்றது எனக்குறிப்பிட்ட இந்தியப் பிரதமர், உடன்படிக்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இலங்கையுடன் உள்ள ஆழமான உறவின் காரணமாக இம்மாநாட்டில் பங்குபெற இலங்கையினை அழைத்ததாகவும் தெரிவித்தார்.

BRICS – BIMSTEC மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அழைப்பு விடுத்தமைக்கு இந்தியப் பிரமதருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி , இலங்கை மற்றும் இந்தியாவுக்கான நீண்டகால நட்புறவினை இது உறுதிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்தார். அத்தோடு இலங்கை கடினமான நிலைமைகளுக்கு முகம்கொடுக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்தியாவின் உதவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டு வருவதையும் ஜனாதிபதி அவர்கள் இச்சந்தர்ப்பதில் நினைவு கூர்ந்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More