Home இலங்கை தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது வாள் வெட்டு

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது வாள் வெட்டு

by admin

 

தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளரின் சகோதரன் உள்ளிட்ட இருவர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பருத்தித்துறை கொட்டடி பகுதியை சேர்ந்த ஜெயதீபன் கண்ணன் (வயது- 28) விஜயராசா செந்தூரன் (வயது- 29) ஆகிய இருவர் மீதுமே வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-
பருத்தித்துறை- கொட்டடியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு தொலைபேசி ஊடாக தொடர்பெடுத்த நபர் ஒருவர் நீ தானே தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர், கரையோரப் பகுதிகளுகளில் தேசிய மக்கள் சக்திக்காக வேலை செய்கிறாய்?  என கேட்டு , உங்களது இடத்திற்கு வாள்வெட்டுக் குழுவென்று வருகிறது பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
அந்நபர் தொலைபேசியை துண்டித்து, சுமார் பத்து நிமிடத்தில் கொட்டடி பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த வாள்வெட்டுக் குழு அங்கிருந்தவர்கள் துரத்தித் துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளனர். இத் தாக்குதலில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரின் சகோதரன் உட்பட இருவர் வாள்வெட்டுகு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்று விடயங்களை ஆராந்து பின்னர் பருத்தித்துறை காவல் நிலையம் சென்று பொறுப்பதிகாரியிடமும் சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலாளிகளை கைது செய்யுமாறு கோரினர்.
 சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை  காவல்துறையினா்  தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More