Home இலங்கை யாழ் மாணவர் மரணம் குறித்த பாதுகாப்புச் செயலாளரின் கருத்து ஏற்புடையதல்ல – லஹிரு வீரசேகர

யாழ் மாணவர் மரணம் குறித்த பாதுகாப்புச் செயலாளரின் கருத்து ஏற்புடையதல்ல – லஹிரு வீரசேகர

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இவ்வாறு மக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பதாகவும் இது ஓர் சாதாரண விடயம் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளதனை ஏற்றுக்கொள்ள முடியாது என லஹிரு கூட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தை ஒர் சாதாரண விடயமாக கருதுவதற்கு தயாரில்லை என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கில் இடம்பெற்ற காரணத்தினால் இந்த சம்பவம் குறித்து குரல் கொடுக்காமல் விடப் போவதில்லை என  அவர்  தெரிவித்துள்ளார். மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை நாட்டின் அனைத்து பல்கலைக்கழங்களிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவிததுள்ளார்.

உயிரிழந்த சுலக்சன் சகோதரர் மரணமானது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட முன்னதாகவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உத்தரவினை மீறி செல்லும் அனைத்து வாகனங்கள் மீதும் சுட முடியுமா என லஹிரு கேள்வி எழுப்பியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More