Home இந்தியா எல்லையில் நான்கு பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் :

எல்லையில் நான்கு பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் :

by admin


குளோபல் தமிழ் செய்தியாளர்

வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் 4 பாகிஸ்தான் இராணுவத்தின் முகாம்களை இந்திய இராணுவம் தகர்த்துள்ளதாக தி இந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் கெரன் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைப்பகுதியில் இந்திய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் 4 தகர்க்கப்பட்டதாக இராணுவ அதிகாரியை மேற்கோள்காட்டி தி இந்து குறிப்பிட்டுள்ளது.

கெரன் செக்டரில் நடந்த பெரும் சமரில் பாகிஸ்தான் தரப்பில் சில உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவ் இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.  நேற்று பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி சுட்டதில் பி.எஸ்.எஃப் ஜவான் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்த இதற்குப் பதில் தாக்குதலை இன்று நடத்தியுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More