Home உலகம் நைஜீரியாவில் அடுத்தடுத்து இடம்பெற்ற 2 தற்கொலைத் தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவில் அடுத்தடுத்து இடம்பெற்ற 2 தற்கொலைத் தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

by admin


நைஜீரியாவின் வடகிழக்கு நகரமான மைதுகுரியில் நேற்றையதினம் 2 தற்கொலை தாக்குதல்கள்   மேற்கொள்ளப்பட்டுள்ளன.  முதலாவதாக காலை வேளையில் மைதுகுரி அருகேயுள்ள பகாசி ராணுவ முகாம் பகுதிக்கு மோட்டார் பொருந்திய வாகனத்தில் சென்ற ஒரு பெண் தீவிரவாதி ஒருவர்  தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க வைத்ததில் 5 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து   ஒரு பெட்ரோல் நிலையம்; அருகே மோட்டார் பொருந்திய வாகனத்தில் சென்ற இன்னுமொரு பெண் தீவிரவாதி குண்டை வெடிக்க செய்ததில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்  17 பேர் காயம் அடைந்துள்ளனர்.  நைஜீரியாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் போகோஹாரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

nigeria2

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More