Home இலங்கை டிரான் அலஸை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

டிரான் அலஸை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிரான் அலஸ் மற்றும் இரண்டு பேரை விளக்க மறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராடா நிறுவன நிதி மோசடி தொடர்பில் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமார் 200 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் எமில்காந்தனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுசொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More