Home இலங்கை ஊனமுற்ற இராணுவ வீரர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஊனமுற்ற இராணுவ வீரர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

தமக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டு வந்த சேவையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் தற்போது சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.  தமது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்வு  கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடருமென இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.  இன்றையதினம் பகல் முதல் அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் பீ.வசந்த தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியம் பெறுவதற்கான  நிர்ணயிக்கப்பட்ட கால எல்லையான 12 வருடங்களை பூர்த்தி செய்யாது இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் கடந்த 31ம் திகதி முதல் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More