Home உலகம் ஈராக்கில் இடம்பெற்ற இரண்டு தற்கொலைக் குண்டு தாக்குதல்களில் குறைந்தது பதினோரு பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஈராக்கில் இடம்பெற்ற இரண்டு தற்கொலைக் குண்டு தாக்குதல்களில் குறைந்தது பதினோரு பேர் கொல்லப்பட்டுள்ளனர்

by admin


ஈராக்கில் திக்ரித் மற்றும் சமாரா ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ள இரண்டு தற்கொலைக் குண்டு தாக்குதல்களில் குறைந்தது பதினோரு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திக்ரித் நகரின் நுழைவு வாயிலில் உள்ள சோதனைச்சாவடி அருகே இன்று தீவிரவாதிகள் மேற்கொண்டு குண்டுத்தாக்குதலில்  5 மாணவிகள்  உட்பட 9 பேர்  கொல்லப்பட்டுள்ளனர்.  மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 25-க்கும் அதிகமானவர்கள் அப்பகுதியில் உள்ள சிகிச்சைக்காக  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை சமாராவில் ஷியா புனிதப் பயணிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மொசூல் நகரில் இருந்து,  ஐஎஸ் அமைப்பினரை விரட்டும் நேக்குடன் ஈராக் அரசு கடந்த மூன்று வாரங்களாக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More