Home உலகம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது

by admin


அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று செவ்வாய்க்கிழமை  ஆரம்பமாகியுள்ளது.  முதல் வாக்குப்பதிவு அமெரிக்காவின் நியூ ஹம்ஷயர் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் நடைபெற்றுள்ளது.  தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.  அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் நேரடியாக வாக்களிப்பதில்லை. நாடு முழுவதும் உள்ள 50 மாகாணங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டத்திலிருந்து 538 தேர்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக பொது மக்கள் இன்று வாக்களிப்பார்கள்.

இந்த வாக்குகள் மாகாண அளவிலேயே எண்ணப்பட்டு முடிவுகள் நாளை அறிவிக்கப்படும். இதன் அடிப்படையில், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பது தெரிய வரும். அமெரிக்காவின் 45வது அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஹிலாரி கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்று சிறப்பை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More