Home உலகம் இரண்டு ஆண்டுகளின் பின்னர் ஈராக்கில் தேவாலயமொன்று இயங்கத் தொடங்கியது

இரண்டு ஆண்டுகளின் பின்னர் ஈராக்கில் தேவாலயமொன்று இயங்கத் தொடங்கியது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இரண்டு ஆண்டுகளின் பின்னர் ஈராக்கில் தேவாலயமொன்று இயங்கத் தொடங்கியுள்ளது. நீண்ட காலமாக ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த தேவாலயம் அமைந்துள்ள பகுதி அண்மையில் ஈராக்கிய படையினரால் மீட்கப்பட்டிருந்ததனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் குறித்த தேவாலயம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளின் பின்னர் தேவாலய மணியோசை ஒலித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பகுதிகளில் இன்னமும் வெடிபொருட்கள் அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதனால் மக்களின் பாதுகாப்பு 100 வீதம் உறுதி செய்யப்படும் வரையில் மக்கள் குடியேறுவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

church2

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More