Home இந்தியா ஜம்மு-காஷ்மீரில் இடம்பெறும் மோதல்களில் 2 தீவிரவாதிகளும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் இடம்பெறும் மோதல்களில் 2 தீவிரவாதிகளும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

by admin

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வடபகுதியில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நேற்றிரவு முதல் நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்  முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அந்தப் பகுதியை ராணுவத்தினர் சுற்றிவளைத்த வேளை தீவிரவாதிகள் அவர்களை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இராணுவத்தினரும்  எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றதாகவும் இன்று அதிகாலைவரை நீடித்த இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும் , அப்பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More